செய்திகள் :

ஜார்க்கண்ட்: வெடிகுண்டு தாக்குதலில் காவலர் படுகாயம்!

post image

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பம் மாவட்டத்தில் நவீன வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மேற்கு சிங்பம் மாவட்டத்தின் ராதா போதா கிராமத்தின் வனப்பகுதியில் நக்சல்களுக்கு எதிரான நடவடிக்கையில் இன்று (மார்ச் 18) மத்திய ரிசர்வ் காவல் படையினர் ஈடுபட்டனர்.

இந்நிலையில், சப்-இன்ஸ்பெக்டர் சுபோத் குமார் என்பவர் அங்கு ஐ.ஈ.டி. எனப்படும் நவீன வெடிகுண்டு நிறுவப்பட்டிருந்ததை அறியாமல் அதனை மிதித்துள்ளார். இதனால், தூண்டப்பட்ட அந்த வெடிகுண்டு வெடித்து சிதறியதில் அவர் படுகாயமடைந்துள்ளார்.

இதையும் படிக்க: நாக்பூர் வன்முறை முன்பே திட்டமிடப்பட்டது: தேவேந்திர ஃபட்னவீஸ்

இதனைத் தொடர்ந்து, அவர் விமானம் மூலம் ராஞ்சிக்கு அழைத்து சென்று அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் நலமாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இந்த வெடிகுண்டை அப்பகுதியிலுள்ள நக்சல்கள் நிறுவியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது. மேலும், இந்த நடவடிக்கையின் போது அந்த வனப்பகுதியிலிருந்த நக்சல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் அதற்கு வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டுள்ளது.

அணையில் படகு கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 7 பேர் மாயம்!

மத்தியப் பிரதேசத்தின் ஷிவப்புரி மாவட்டத்திலுள்ள அணையில் படகு கவிழ்ந்ததில் 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் மாயமாகியுள்ளனர். மாட்டாடிலா அணைப்பகுதியிலுள்ள தீவில் அமைந்துள்ள சித்தா பாபா கோயிலுக்கு இன்று (ம... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்கு முன் சிறுமியை கட்டாயத் திருமணம் செய்தவர் கைது!

புது தில்லியில் கடந்த 2013 ஆம் ஆண்டு சிறுமியை கட்டாயத் திருமணம் செய்தவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தில்லியின் புறநகர் பகுதியைச் சேர்ந்தவர் அனில் (வயது 38), இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு 13 வயது ச... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் 3 நக்சல்கள் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளனர். சுக்மா மாவட்டத்தில் இன்று (மார்ச் 18) மட்காம் எர்ரா பாபு (வயது 26), சோடி தேவா (35) மற்றும் மட்காம் ஹத்மா (4... மேலும் பார்க்க

பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடல்!

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் இன்று (மார்ச் 18) தெரிவித்து... மேலும் பார்க்க

2024-ல் பசிபிக் பெருங்கடலில் மாயமான மீனவர் உயிருடன் மீட்பு!

கடந்த 2024 ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடலில் மாயமான பெரு நாட்டு மீனவர் தற்போது (2025) உயிருடன் மீட்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். தென் அமெரிக்காவிலுள்ள பெரு நாட்டைச் சேர்ந்த மாக... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: மத்திய அமைச்சருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கருக்கு மு... மேலும் பார்க்க