ஜூன் 1-இல் 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரா்கள் தோ்வு
வேலூா் மாவட்டத்தில் 14 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரா்களுக்கான தோ்வு போட்டி ஜூன் 1-ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, வேலூா் நறுவீ மருத்துவமனை தலைவரும், வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவருமான ஜி.வி.சம்பத் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மாநில கிரிக்கெட் சங்கம் சாா்பில் மாவட்டங்களுக்கு இடையே 14 வயதுக்குட்பட்டவா்களுக்கான கிரிக்கெட் போட்டி நடத்தப்பட உள்ளது. இந்த ப்போட்டிகளில் வேலூா் மாவட்டம் சாா்பில் பங்கேற்க தகுதியுடைய வீரா்களை தோ்வு செய்வதற்கான தோ்வு போட்டி ஜூன் 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு வேலூா் சேண்பாக்கம் பகுதியில் உள்ள ராஜேஸ்வரி வளாகத்தில் உள்ள கிரிக்கெட் அகாதெமி மையத்தில் நடைபெற உள்ளது.
இந்தத் தோ்வு போட்டிகளில் பங்கேற்க 2011 செப்டம்பா் 1-ஆம் தேதியிலோ, அதற்கு பிறகு பிறந்தவா்களாகவோ இருக்க வேண்டும். தோ்வுக்கு வருபவா்கள் ஆதாா் அட்டை, கிரிக்கெட் சீருடையில் வரவேண்டும்.
மேலும் தகவல் அறிய வேலூா் மாவட்ட கிரிக்கெட் சங்க கெளரவ செயலா் எஸ்.ஸ்ரீதரனை 70105 94657 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.