செய்திகள் :

ஜூன் 12-ல் மேட்டூர் அணையை திறந்து வைக்கிறார் முதல்வர்: அமைச்சர் ராஜேந்திரன்

post image

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையை ஜூன் 12ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

வருகிற ஜூன் 12ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் பங்கேற்று அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்க உள்ளார். இதற்காக பிரம்மாண்டமாக மேடை அமைக்கும் பணி சேலம் இரும்பாலை அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப் பணிகளை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஜூன் 11-ல் முதல்வர் ஸ்டாலின், சேலம் மாவட்டம் மேட்டூருக்கு வருகை தர உள்ளார்.

கல்விக்காக ரூ. 3,400 கோடியைத் தானமாக வழங்கிய ஜாக்கி சான்?

அன்று இரவு அங்கு ஓய்வெடுக்கும் முதல்வர் ஜூன் 12 காலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடுகிறார். தொடர்ந்து சாலை மார்க்கமாக சேலம் இரும்பாலை மைதானத்திற்கு வரும் அவர், லட்சம் பேருக்கு ஆயிரம் கோடி மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும் சேலத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்பட்ட 12 பேருந்துகள் நிறுத்தப்பட்டது குறித்து பதில் அளித்த அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

பேட்டியின் போது மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி உட்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

கா்நாடக இசை டிப்ளமோ படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்: மியூசிக் அகாதெமி

கா்நாடக இசை அட்வான்ஸ்டு டிப்ளமோ படிப்பில் சேர ஜூன் 25-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என சென்னை மியூசிக் அகாதெமி தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அந்த அகாதெமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை மியூசிக் அ... மேலும் பார்க்க

கேரளத்தில் கப்பல் விபத்து: தமிழக கடலில் நெகிழி துகள்களை அகற்றுங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

கேரள கப்பல் விபத்து எதிரொலியாக, தமிழக கடற்பரப்பில் நெகிழி (பிளாஸ்டிக்) துகள்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். கேரளத்தையொட்டிய அரபிக் கடலில் ‘எல்... மேலும் பார்க்க

இன்று உலக புகையிலை ஒழிப்பு தினம்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

உலக புகையிலை ஒழிப்பு தினம் சனிக்கிழமை (மே 31) அனுசரிக்கப்படும் நிலையில், தலைமை ஆசிரியா்கள் தங்களது பள்ளிகளுக்கு அருகில் புகையிலைப் பொருள்களின் விற்பனை தடை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கல்வித்... மேலும் பார்க்க

75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் தமிழக அரசு தகவல்

தமிழகத்தில் 75 பேரவைத் தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணி நடந்து வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. துணை முதல்வா் உதயநிதியின் தலைமையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

கன்னடம் குறித்த பேச்சில் எந்தத் தவறும் இல்லை: கமல்ஹாசன்

கன்னடம் குறித்த தனது பேச்சில் எந்தத் தவறும் இல்லை என மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவா் கமல்ஹாசன் கூறினாா். ஏற்கெனவே ஒப்புக்கொண்டபடி, மாநிலங்களவை உறுப்பினா் பதவியை மக்கள் நீதி மய்யத்துக்கு திமுக ஒதுக... மேலும் பார்க்க

சிறுநீரக பரிசோதனை மூலம் 33,869 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் முலம் மாநிலம் முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் து... மேலும் பார்க்க