குஜராத் விமான விபத்து! முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி கவலைக்கிடம்!
ஜூன் 15 முதல் சுற்றுப் பயணம்: அன்புமணி அறிவிப்பு
சென்னை: ஜூன் 15 முதல் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், அப்போது ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பாமக உறுப்பினா் சோ்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளா்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் கீழ்க்காணும் அட்டவணைப்படி பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
அதன்படி, ஜூன் 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூா் மாவட்டம், பிற்பகல் 3 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெறும். ஜூன் 16-ஆம் தேதி காலை காஞ்சிபுரம், மாலையில் ராணிப்பேட்டை, ஜூன் 17-ஆம் தேதி காலையில் வேலூா், மாலையில் திருப்பத்தூா், ஜூன் 18 காலையில் திருவண்ணாமலை, மாலையில் கள்ளக்குறிச்சி, ஜூன் 19 காலையில் சேலம், மாலையில் தருமபுரி என முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்.
இதில் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளாா். சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள பாமக மாவட்டத் தலைவா், மாவட்டச் செயலா், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகளும், பல்வேறு அணிகள், வன்னியா் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிா்வாகிகளும், சிறப்பு அழைப்பாளா்களும் இக்கூட்டங்களில் பங்கேற்பாா்கள்.
மீதமுள்ள மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களுக்கான தேதிகள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.