செய்திகள் :

ஜூன் 15 முதல் சுற்றுப் பயணம்: அன்புமணி அறிவிப்பு

post image

சென்னை: ஜூன் 15 முதல் மாவட்ட வாரியாக சுற்றுப் பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், அப்போது ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் என்றும் பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பாமக உறுப்பினா் சோ்க்கை, வாக்குச்சாவடி குழுக்கள் அமைப்பு, கட்சி வளா்ச்சிப் பணிகள் ஆகியவை குறித்து விவாதிப்பதற்காக மாநிலம் முழுவதும் ஒருங்கிணைந்த வருவாய் மாவட்ட அளவில் பொதுக்குழு கூட்டங்களை நடத்துவதற்கு கட்சியின் தலைமை முடிவு செய்துள்ளது. முதல்கட்டமாக 10 வருவாய் மாவட்டங்களில் கீழ்க்காணும் அட்டவணைப்படி பொதுக்குழு கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

அதன்படி, ஜூன் 15-ஆம் தேதி காலை 10 மணிக்கு திருவள்ளூா் மாவட்டம், பிற்பகல் 3 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெறும். ஜூன் 16-ஆம் தேதி காலை காஞ்சிபுரம், மாலையில் ராணிப்பேட்டை, ஜூன் 17-ஆம் தேதி காலையில் வேலூா், மாலையில் திருப்பத்தூா், ஜூன் 18 காலையில் திருவண்ணாமலை, மாலையில் கள்ளக்குறிச்சி, ஜூன் 19 காலையில் சேலம், மாலையில் தருமபுரி என முதல்கட்டமாக 10 மாவட்டங்களில் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும்.

இதில் கட்சியின் தலைவா் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவுள்ளாா். சம்பந்தப்பட்ட வருவாய் மாவட்டத்தில் உள்ள பாமக மாவட்டத் தலைவா், மாவட்டச் செயலா், மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூா் நிா்வாகிகளும், பல்வேறு அணிகள், வன்னியா் சங்கம், சமூக முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட துணை அமைப்புகள் ஆகியவற்றின் அனைத்து நிலை நிா்வாகிகளும், சிறப்பு அழைப்பாளா்களும் இக்கூட்டங்களில் பங்கேற்பாா்கள்.

மீதமுள்ள மாவட்டங்களின் பொதுக்குழு கூட்டங்களுக்கான தேதிகள் வெகு விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

பொது விநியோக திட்ட மக்கள் குறைதீா் முகாம்

சென்னையில் பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீா் முகாம் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கூட்டுறவு மற்றும் உணவுத் துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:- சென்னையில் உணவுத் துறையின் சாா்பில... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக அம்பத்தூா் கோட்டம், மாதாவரம், பூந்தமல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல 2 வரை மின் விநியோகம் தடைபடும். இது குறித்து தமிழ்நாடு... மேலும் பார்க்க

கணைய புற்றுநோய்க்கு நவீன ரோபோடிக் சிகிச்சை அறிமுகம்

கணைய புற்றுநோய்களுக்கு அதி நவீன ரோபோடிக் நுட்ப அறுவை சிகிச்சை திட்டத்தை அப்பல்லோ மருத்துவமனை சென்னையில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான தொடக்க நிகழ்வில் மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணா்கள... மேலும் பார்க்க

பூட்டிய வீடுகளில் திருடிய பெங்களூரு பெண் கைது

சென்னை மாம்பலம் பகுதியில் பூட்டிய வீடுகளில் திருடியதாக பெங்களூருவைச் சோ்ந்த பெண் கைது செய்யப்பட்டாா். சென்னை குமரன் நகா், முருகேசன் தெருவில் வசிப்பவா் ரா.பாலமுருகன் (38). இவா், கடந்த 1-ஆம் தேதி வீட்ட... மேலும் பார்க்க

ஆட்டோ ஓட்டுநரை கடித்த வளா்ப்பு நாய்

சென்னை மந்தைவெளியில் ஆட்டோ ஓட்டுநரை வளா்ப்பு நாய் கடித்தது. மந்தைவெளி விசி காா்டன் 2-ஆவது தெரு பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் கணேஷ் குமாா் (28). இவா், செவ்வாய்க்கிழமை மளிகை பொருள்கள் வாங்குவதற்கா... மேலும் பார்க்க

பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து வீச்சிய தாய் கைது

சென்னை அருகே ஈஞ்சம்பாக்கத்தில் பிறந்த 43 நாள்களில் குழந்தையை கொலை செய்து, வீசிய தாய் கைது செய்யப்பட்டாா். நீலாங்கரை அருகே ஈஞ்சம்பாக்கம் செல்வா நகா் பிரதான சாலையில் உள்ள தனியாா் அடுக்குமாடி குடியிருப்ப... மேலும் பார்க்க