செய்திகள் :

ஜூலை 18ல் பிகார் செல்கிறார் பிரதமர் மோடி!

post image

பிகாரில் உள்ள மோதிஹரிக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தர உள்ளதாக அந்த மாநில பாஜக தலைவர் திலீப் குமார் ஜெய்ஸ்வால் திங்கள்கிழமை தெரிவித்தார்.

பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நிகழவுள்ள நிலையில், பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் பிகாரில் படையெடுத்து வருகின்றனர்.

இதுதொடர்பாக திலீப் குமார் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஜூலை 18ல் பிரதமர் மோடி பிகாரின் மோதிஹரிக்கு வருகை தருவார். இது பிரதமரின் 53வது மாநில வருகையாகும். பிரதமர் மோடியின் மாநில வருகை விக்சித் பிகார் மாநிலத்திற்கானது.

வரவிருக்கும் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடியின் வருகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிகாரில் இந்தாண்டு இறுதியில் அக்டோபர்- நவம்பரில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியத் தேர்தல் ஆணையம் இதற்கான தேதியை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையில், பிரேசிலில் நடைபெற்ற 17வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது மனிதக்குலத்திற்குக் கடுமையான அச்சுறுத்தல் என்று அவர் கண்டனம் தெரிவித்திருந்தார். உலகளாவிய தெற்கில் இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்தார்.

பிரதமர் மோடியின் பிகார் வருகையின்போது சமஸ்திபூரில் ரூ. 17 கோடி மதிப்புள்ள ரயில் திட்டங்களைத் தொடங்கி வைப்பார். மேலும் கற்பூரி கிராம் ரயில் நிலையத்தை மேம்படுத்துவதற்கான அடிக்கல் நாட்டுவார் என்று அவர் தெரிவித்தார்.

Prime Minister Narendra Modi will visit Motihari in Bihar on July 18, Bihar BJP chief Dilip Kumar Jaiswal said on Monday. This will mark PM Modi's 53rd visit to Bihar.

ஜூலை 9ல் போராட்டங்களில் பங்கேற்கும் ராகுல்: பிகாரில் சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ஜூலை 9ல் பாட்னா செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. பிகாரில் இந்தாண்டு அக்டோபர்- நவம்பரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று... மேலும் பார்க்க

18 அடி நீள ராஜ நாகம்.. அசால்டாக பிடித்த கேரள வனத்துறை பெண் காவலர்!

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழியை பொய்யாக்கி, 18 அடி நீள ராஜ நாகத்தை, அசால்டாகப் பிடித்துள்ளார் கேரள வனத்துறை பெண் காவலர். அந்தப் புகைப்படங்களைப் பார்த்த மக்கள் சமூக வலைதளத்தில் அவருக்கு பா... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு சிவப்பு கம்பளம் விரித்த கேரள அரசு: பாஜக

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாகக் கைது செய்யப்பட்ட ஜோதி மல்ஹோத்ராவுக்கு கேரள சுற்றுலாத் துறைக்கு இடையேயான தொடர்பை பாஜக விமர்சித்துள்ளது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடன் தொடர்பில... மேலும் பார்க்க

அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன்? முன்னாள் தலைமை நீதிபதி விளக்கம்

அரசு பங்களாவை காலி செய்வது குறித்து உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் விளக்கம் அளித்துள்ளார்.முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டின் பதவிக்காலம் முடிவடைந்... மேலும் பார்க்க

ஒரு நாள் கூட வேலை செய்யாமல் 12 ஆண்டுகள்.. ரூ.28 லட்சம் சம்பளம் வாங்கிய போலீஸ்!

மத்தியப் பிரதேச மாநில காவல்துறையில் பணிக்கு சேர்ந்து சுமார் 12 ஆண்டுகளாக ஒரு நாள் கூட வேலைக்குச் செல்லாமல் ரூ.28 லட்சம் வரை ஊதியமாகப் பெற்ற காவலர் பற்றிய தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.காவல்த... மேலும் பார்க்க

வன்கொடுமை வழக்குக்குப் பிறகு கொல்கத்தா சட்டக் கல்லூரி இன்று திறப்பு!

மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி வளாகத்தில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஒரு வாரத்திற்குப் பிறகு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திங்கள்கிழமை மீண்டும் கல்ல... மேலும் பார்க்க