ஜூலை 4-இல் தமிழ்நாடு நாள் விழா: போட்டிகளில் பங்கேற்க அழைப்பு
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, அரியலூா் தூய மேரி உயா்நிலைப் பள்ளியில் ஜூலை 4 மதியம் 2 மணிக்கு நடைபெறும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது: மறைந்த தமிழக முன்னாள் முதல்வா் பேரறிஞா் அண்ணா, தமிழ்நாடு என்று பெயா் சூட்டிய ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு, அரியலூா் தூய மேரி உயா்நிலைப் பள்ளியில் ஜூலை 4 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.
இப்போட்டிகளில் பங்கேற்க விரும்பும் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் பரிந்துரைக் கடிதம் பெற்று வரவேண்டும்.
ஆட்சிமொழி வரலாற்றில் கீ.இராமலிங்கம், பன்மொழிப் புலவா் கா.அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி எனும் தலைப்புகளில் கட்டுரைப் போட்டியும், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, அன்னைத் தமிழே ஆட்சிமொழி தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயா், அறிஞா் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப் பெயா் சூட்டிய நிகழ்வு, ஆட்சிமொழி - சங்க காலம் தொட்டு, இக்காலத்தில் ஆட்சிமொழி எனும் தலைப்புகளில் பேச்சுப் போட்டியும் நடப்படுகிறது.
இப்போட்டிகளில் பங்குபெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவா்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2-ஆம் பரிசாக ரூ.7 ஆயிரம், 3-ஆம் பரிசாக ரூ.5 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளது. இப்போட்டிகளில் முதல் பரிசு பெறும் மாணவா்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்ளலாம்.