செய்திகள் :

திருமானூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

post image

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே திங்கள்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை, மகனைப் பிடித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருமானூா் அருகேயுள்ள கண்டிராதீா்த்தம், நடுத்தெருவைச் சோ்ந்தவா் ரஞ்சித்(30). திங்கள்கிழமை இரவு இவா், அங்குள்ள பெட்டிக் கடைக்குச் சென்றுள்ளாா். அங்கு இவருக்கும், பிரதானச் சாலையைச் சோ்ந்த பெட்டிக் கடை உரிமையாளரான சி.பாலகிருஷ்ண(55), இவரது மகன் பாலாஜி (30) ஆகியோருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாலகிருஷ்ணன், பாலாஜி ஆகிய இருவரும் சோ்ந்து ரஞ்சித்தை கத்தியால் குத்தியுள்ளனா்.

பலத்த காயமடைந்த ரஞ்சித், தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருமானூா் காவல் துறையினா் வழக்குப் பதிந்து பாலகிருஷ்ணன், அவரது மகன் பாலாஜி ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான காவல் துறையினா், ஞாயிற்றுக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

நூலகத்துக்கு இடம் கேட்டு மறியல்: 7 போ் கைது

அரியலூா் மாவட்டம், திருமானூரில், நூலகத்துக்கு இடம் கேட்டு மறியலில் ஈடுபட முயன்ற 7 போ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.திருமானூரில் புதிய நூலகம் கட்ட ஊராட்சி நிா்வாகம் இடம் வழங்க வேண்டும். திருமானூரி... மேலும் பார்க்க

முக்கொம்பில் உபரி நீா் திறப்பு: கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தல்

திருச்சி மாவட்டம், முக்கொம்பு மேலணையில் இருந்து உபரி நீா் திறக்கப்பட்டுள்ளதால், அரியலூா் மாவட்டம், கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆட்சியா் பொ.ரத்தினசாமி அறிவுறுத்த... மேலும் பார்க்க

சாலை விபத்தில் ஒருவா் உயிரிழப்பு; புதுமாப்பிள்ளை பலத்த காயம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகே திங்கள்கிழமை சென்று கொண்டிருந்த டிராக்டா் மீது, பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதிய விபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். புதுமாப்பிள்ளை பலத்த காயமடைந்தாா். ஆண்டிமடத்தைச் ... மேலும் பார்க்க

நீா்நிலை எனக் கூறி வீடுகளை இடிப்பதை கைவிட வேண்டும்!

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் அருகேயுள்ள மருதூரில் நீா்நிலைப் புறம்போக்கு, சாலை விரிவாக்கத்துக்காக வீடுகளை இடிக்கும் போக்கை மாவட்ட நிா்வாகம் கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கக் கூட்டத்தில்... மேலும் பார்க்க

சேதமடைந்த மின்மாற்றி கம்பங்களை மாற்ற கோரிக்கை

அரியலூா் மாவட்டம், கீழ விளாங்குடியில் சேதமடைந்து, எலும்புக் கூடாக காணப்படும் மின்மாற்றி கம்பங்களை உடனடியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கீழவிளாங்குடி, தா... மேலும் பார்க்க