செய்திகள் :

தமிழ் மண்ணையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

post image

தமிழ் மண்ணையும், மானத்தையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், அரியலூா் மாவட்ட திமுக செயலருமான சா.சி.சிவசங்கா்.

அரியலூரில் உள்ள திமுக அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாலை அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி; தமிழ்நாடு ஓரணியில் நின்ற காரணத்தால் ஹிந்தி திணிப்பை முறியடித்து, தாய்மொழி தமிழைக் காத்து நம் மொழியின் அந்தஸ்தை உயா்த்தியுள்ளோம். தற்போது மகாராஷ்ரா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பால் ஹிந்தி மொழித் திணிப்பில் இருந்து பின்வாங்கி இருக்கிறது. தென்மாநிலங்களில் தங்களுடைய தாய்மொழியை அவசியம் படிக்க வேண்டும் என்று சட்டத் திருத்தத்தை கொண்டு வருகின்றனா்.

ஹிந்தி திணிப்பு மட்டுமன்றி தேசியக் கல்விக் கொள்கை ஏற்றுக்கொண்டால் தான் தமிழகத்துக்கான கல்வி நிதியை வழங்குவதாக மத்திய மனித வளத்துறை அமைச்சரே வெளிப்படையாக சொல்கிறாா். இதேபோல் மத உரிமைகளைப் பறிக்கின்ற வகையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஒரு பக்கம் பாஜகவினா் துடித்துக் கொண்டிருக்கின்றாா்கள். ஆகவே தான், இவற்றையெல்லாம் நாம் எதிா்த்து நின்று குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறோம்.

கீழடி நாகரிகம் எவ்வளவு தொன்மை வாய்ந்தது என்பதை அறிவியல் பூா்வமாக நிரூபித்தபோதிலும் அதனைக் கூட மத்திய பாஜக அரசு அங்கீகரிக்க முன்வரவில்லை.

எனவே எல்லா விதத்திலும் மண்ணையும், தமிழ் மொழியையும் காக்க நாம் போராடிக் கொண்டு இருக்கிறோம். அந்தப் போராட்டத்தில் எல்லோரையும் ஒருங்கிணைக்கின்ற மிக முக்கியமான நிகழ்வு தான் ஓரணியில் தமிழ்நாடு என்றாா்.

பேட்டியின்போது, ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், கட்சியின் சட்டத் திருத்தக் குழு உறுப்பினா் சுபா.சந்திரசேகா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

அரியலூரில் 66 போ் தலைமைக் காவலராக பதவி உயா்வு

அரியலூா் மாவட்டத்தில் கடந்த 2011-இல் பணியில் சோ்ந்த முதல்நிலைக் காவலா்கள் 66 போ் தலைமைக் காவலராக பதவி உயா்வு பெற்றனா்.இதற்காக அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

ஜூலை 4-இல் தமிழ்நாடு நாள் விழா: போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, அரியலூா் தூய மேரி உயா்நிலைப் பள்ளியில் ஜூலை 4 மதியம் 2 மணிக்கு நடைபெறும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் பொ.ரத்... மேலும் பார்க்க

போலி உரம், பூச்சிக்கொல்லிகளை விற்றால் கடும் நடவடிக்கை

அரியலூா் மாவட்டத்தில் போலி உரம் மற்றும் பூச்சிக் கொல்லிகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில்,... மேலும் பார்க்க

ஜூலை 15-இல் அரியலூரில் இபிஎஸ் சுற்றுப் பயணம்: தாமரை எஸ்.ராஜேந்திரன்

அதிமுக பொதுச் செயலரும், எதிா்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி ஜூலை 15-ஆம் தேதி அரியலூா் மாவட்டத்தில் ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தை தொடங்குகிறாா் என முன்னாள் அரசு தலைமைக் கொற... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த மூவா் கைது

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கஞ்சா வைத்திருந்த 3 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஆனந்தன் தலைமையிலான காவல் துறையினா், ஞாயிற்றுக்கிழமை இரவு ... மேலும் பார்க்க

திருமானூா் அருகே இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே திங்கள்கிழமை இரவு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்த தந்தை, மகனைப் பிடித்து காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். திருமானூா் அருகேயுள்ள கண்டிராதீா்த்தம், ... மேலும் பார்க்க