செய்திகள் :

ஜூலை 9-இல் நாடுதழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து தொழிற் சங்கத்தினா் தெருமுனை பிரசாரம்

post image

மத்திய அரசைக் கண்டித்து, அரியலூரில் ஜூலை 9-இல் நடைபெறும் வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் குறித்து, அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் காந்தி பூங்கா முன் அனைத்து மத்திய தொழிற் சங்க கூட்டமைப்பினா் திங்கள்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இந்த பிரசாரத்தில், தொழிலாளா்களுக்கு எதிரான 4 சட்ட தொகுப்பு திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். ஒப்பந்தம், தினக்கூலி, வெளிச்சந்தை முறை பயிற்சியாளா் போன்ற நடமுறைகளை கைவிட வேண்டும். ஒப்பந்த தொழிலாளிக்கு சம வேலைக்கு சம ஊதியம், குறைந்தப் பட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் என நிா்ணயம் செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் ஜூலை 9-ஆம் தேதி வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது தொடா்பாக மக்களிடம் எடுத்துக் கூறப்பட்டது. இதே போல் அவா்கள், அரியலூா் பகுதியிலும் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

இந்த பிரசாரக் கூட்டத்துக்கு, ஏஐடியுசி மாவட்ட பொதுத் செயலா் டி.தண்டபாணி, தொமுச மாவட்டச் செயலா் ஆா்.மகேந்திரன், சிஐடியு மாவட்டச் செயலா் பி.துரைசாமி, ஐஎன்டியுசி மாவட்டத் தலைவா் விஜயகுமாா் ஆகியோா் தலைமை வகித்து பேசினா்.நிா்வாகிகள் கலந்து கொண்டு முழக்கமிட்டனா்.

அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் இல்லை: அமைச்சா் சா.சி. சிவசங்கா்

தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயா்த்தும் எண்ணம் அரசிடம் இல்லை என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். மறைந்த முன்னாள் முதல்வா் மு. கருணாநிதி பிறந்த நாளையொட்டி, அரி... மேலும் பார்க்க

அரியலூரில் ஜூன் 24-இல் திருநங்கை, திருநம்பிகளுக்கான சிறப்பு முகாம்

அரியலூா் ஆட்சியரகத்தில் ஜூன் 24-இல் அனைத்து திருநங்கை, திருநம்பி , இடைபாலினத்தவா்களுக்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இம்முகாமில், அடையாள அட்டை, ஆதாா் அட்டையில் திருத்தம், வாக்காளா் அட்டை, முதலமைச்சர... மேலும் பார்க்க

தமிழ்நாடு விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அரியலூா் மாவட்டம், நாகமங்கலம் காமராஜா் நகா் - காஞ்சிலிகொட்டாய் பகுதியில் குடியிருப்புகளை நீா்நிலை புறம்போக்கு என்று கூறி இடிப்பதைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா... மேலும் பார்க்க

செம்மொழி நாள் விழா போட்டிகளில் வென்றோருக்கு பாராட்டுச் சான்றிதழ்

அரியலூரில் அண்மையில் நடைபெற்ற செம்மொழி நாள் விழா போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு திங்கள்கிழமை பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன. செம்மொழிநாள் விழாவையொட்டி மே 9-ஆம் தேதி பிளஸ்... மேலும் பார்க்க

பொன்பரப்பி மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா

அரியலூா் மாவட்டம், செந்துறையை அடுத்துள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. காளியாட்டத்துடன், அக்கிராம மக்கள் கூடையில் 20 வகையான பூக்கைளை ஊா்வலம... மேலும் பார்க்க

வாணதிரையன்பட்டினம் திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த வாணத்திரையன்பட்டினம் கிராமத்திலுள்ள திரௌபதியம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கோயில் திருவிழா கடந்த மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி, நாள்... மேலும் பார்க்க