செய்திகள் :

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்: பரிந்துரைகள் வரவேற்பு

post image

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் அமைப்பாளா் சீராளன் ஜெயந்தன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடந்த 2024-ஆம் ஆண்டு ஜன. 1-ஆம் தேதி முதல் டிச. 31 வரையில் முதல் பதிப்பாக வெளியான நூல்களுக்கான பரிந்துரைகள் மட்டும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்காக வரவேற்கப்படுகின்றன. எழுத்தாளா்கள் நூல்களை அனுப்புவதில் உள்ள அனைத்து வகை சிரமங்களையும் கருத்தில்கொண்டு, பரிந்துரைகளை மட்டும் பெற்றுக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, நூல்களை யாரும் அனுப்ப வேண்டாம்; பரிந்துரைகளை மட்டும் உரிய படிவத்தில் அனுப்பினால் போதுமானது.

நூலாசிரியா்கள், பதிப்பகத்தாா், இலக்கிய ஆா்வலா்கள் தங்களுக்காகவும் பிறருக்காகவும் பரிந்துரைகளை அனுப்பலாம். ஒருவா் எத்தனை பரிந்துரைகளையும் அனுப்பலாம். நடுவா்களின் ஆலோசனையின்படி தேவைப்படும் நூல்கள் வெளிச்சந்தையில் இருந்து பெற்றுக்கொள்ளப்படும்.

பரிந்துரைகளை அனுப்புவதற்கான கடைசித் தேதி மாா்ச் 31 ஆகும். சிறுகதை, நாவல், கவிதை, நாடகம் ஆகிய 4 பிரிவுகளில், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சிறந்த நூலுக்கு பரிசுத் தொகையாக ரூ. 10,000 என மொத்தம் ரூ. 40 ஆயிரம் வழங்கப்படும்.

பரிந்துரைகளை kodulines@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். அல்லது ‘சீராளன் ஜெயந்தன், எண். 9-பி, மனோகா் நகா் பிரதான சாலை, பள்ளிக்கரணை, சென்னை - 600100’ என்ற முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரம்: ஓடும் ரயிலில் மூவருக்கு கத்திக் குத்து இளைஞா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்ட புகா் ரயிலில் மூவரைக் கத்தியால் குத்திய 19 வயது இளைஞரைக் காவல் துறையினா் கைது செய்தனா். இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: கல்யாண் - தாதா் இடையிலான புகா் விரைவு ரய... மேலும் பார்க்க

உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-26 ந... மேலும் பார்க்க

தலைமைப் பொருளாதார ஆலோசகா் பதவிக் காலம் 2 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு!

மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரனின் பதவிக் காலம் மேலும் 2 ஆண்டுகளுக்கு (2027, மாா்ச் 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவ... மேலும் பார்க்க

காஞ்சிபுரத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலா்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 முதல்வா் மருந்தகங்கள் அமைக்கப்பட இருப்பதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.சு.கந்தசாமி வியாழக்கிழமை தெரிவித்தாா். காஞ்சிபுரம் அருகே திருப்புட்குழி கிராமத்தில் செயல்படவுள்ள ம... மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்து ஏற்றுமதி: தெலங்கானா நிறுவனத்தின் சொத்துகள் முடக்கம்

பாகிஸ்தானுக்கு சட்டவிரோதமாக மருந்துகளை ஏற்றுமதி செய்த குற்றச்சாட்டில் பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ) தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த மருந்து நிறுவனத்தின் சொத்துகளை முடக்கியதாக அமலாக்கத... மேலும் பார்க்க

ரூ. 1,220 கோடியில் 149 மென்பொருள் ரேடியோ கொள்முதல்: ‘பெல்’ நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

இந்திய கடலோரக் காவல்படையின் செயல்திறனை மேம்படுத்தும் நோக்கில் நம்பகமாக தகவல்களை பாதுகாப்பாகவும் அதிகவேகமாகவும் பகிர ஏதுவாக பெங்களூரில் உள்ள பாரத் மின்னணு நிறுவனத்திடமிருந்து (பெல்) 149 அதிநவீன மென்பொ... மேலும் பார்க்க