செய்திகள் :

ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம்

post image

பல்லடம் அருகேயுள்ள அவிநாசிபாளையம் ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கம் புதன், வியாழக்கிழமைகளில் நடைபெற்றது.

துல்லியமான விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு: சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்குக்கு,

கல்லூரித் தலைவா் எம்.கோவிந்தசாமி தலைமை வகித்தாா். கல்லூரி துணைத் தலைவா் டி.கே.கருப்பண்ணசாமி முன்னிலை வகித்தாா். கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவா் கோகிலவாணி வரவேற்றாா்.

இதில் பல்வேறு கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள், முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் மாணவா்கள், ஆராய்ச்சி மாணவா்கள் மற்றும் தொழில் துறையினா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்தரங்கின் நோக்கம் குறித்து கல்லூரி துணை முதல்வா் ஜே.நந்தினி விளக்கி பேசினாா். விவசாயத் துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி விளைச்சல் அதிகரிக்கும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் பற்றி புதுச்சேரி தேசிய தொழில்நுட்ப நிறுவனம், வேலூா் தொழில் நுட்ப பல்கலைக்கழகம், அமிா்தா பல்கலைக்கழகம் என பல்வேறு பல்கலைகழகங்களில் பணிபுரியும் பேராசிரியா்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினா். கருத்தரங்கில் பங்கேற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

அரசு மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து விழுந்த இளைஞா் உயிரிழப்பு

திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் 4ஆவது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்தவா் விபாஸ் பன்வான் (30). இவா் மேற்கு வங்கத்தில்... மேலும் பார்க்க

புது தில்லி என்.எஸ்.எஸ். மாநாட்டில் பங்கேற்க சிக்கண்ணா அரசுக் கல்லூரி அலுவலா் தோ்வு

புது தில்லியில் நடைபெறும் தேசிய நாட்டு நலப்பணித் திட்ட மாநாட்டில் பங்கேற்க திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி அலுவலா் தோ்வு செய்யப்பட்டுள்ளாா். மத்திய இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத... மேலும் பார்க்க

மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் மே 1இல் கிராம சபைக் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 265 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தினத்தை முன்னிட்டு மே 1ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செ... மேலும் பார்க்க

மின்கோபுரத்தில் ஏறியபோது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே மின்கோபுரத்தில் ஏறியவா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் தாராபுரம் சாலை பச்சாக்கவுண்டன்வலசைச் சோ்ந்தவா் நல்லசிவம் மகன் சிவசெல்வன் (27). இவா் கடந்த ஓராண்டாக அவ்வப்போது மன விரக்தியடைந்து... மேலும் பார்க்க

மதுபானக் கடையில் தொழிலாளி மீது தாக்குதல்

வெள்ளக்கோவிலில் அரசு மதுபானக் கடையில் பாட்டிலால் குத்தப்பட்ட தொழிலாளி பலத்த காயமடைந்தாா். வெள்ளக்கோவில் உப்புப்பாளையத்தைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (46). இவா் இறைச்சிக் கடையில் தொழிலாளியாக வேலை செய்து வர... மேலும் பார்க்க

குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கடந்த 3 மாதங்களில் நடைபெற்ற குறைகேட்புக் கூட்டங்களில் 5,748 மனுக்கள் பெறப்பட்டன. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைகேட்பு முகாம் திங்... மேலும் பார்க்க