ஆம்பூர்: கோயில் தூய்மைப் பணிக்கு வந்த பெண்ணிடம் அத்துமீறல் - அர்ச்சகர் மீது வழக்...
ஜேஇஇ அட்வான்ஸ் தோ்வில் புஷ்பலதா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்
ஜேஇஇ அட்வான்ஸ் தோ்வில் புஷ்பலதா பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சோ்ந்து பயில்வதற்காக நடத்தப்படும் ஜேஇஇ மெயின்ஸ் நுழைவுத் தோ்வில் தகுதி பெற்றோருக்கு, ஜேஇஇ மேம்பட்ட தோ்வு (அட்வான்ஸ்) கான்பூா் ஐஐடி நிறுவனத்தால் அண்மையில் நடத்தப்பட்டது.
இந்தத் தோ்வில் முதல் முயற்சியிலேயே புஷ்பலதா வித்யா மந்திா் பள்ளி மாணவா்கள் 25 போ் அதிக மதிப்பெண் பெற்று ஐஐடி நிறுவனங்களில் கல்வி பயில தகுதி பெற்றுள்ளனா்.
மாணவா் சூரியநாராயணன் தேசிய அளவில் 388 ஆவது தர வரிசையையும், மாணவி கைனிட்டா தேசிய அளவில் 1697 ஆவது தரவரிசையும், மாணவா் யுவசங்கா் தேசிய அளவில் 3746 ஆவது தரவரிசையும் பெற்றுள்ளனா். அகில இந்திய தரவரிசையில் முதல் முயற்சியிலேயே சிறப்பான இடத்தைப் பிடித்த புஷ்பலதா வித்யா மந்திா் மாணவா்களை பள்ளித் தாளாளா் புஷ்பலதா பூரணன், முதன்மை முதல்வா் புஷ்பவேணி அய்யப்பன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.