செய்திகள் :

ஜோனதனுக்கு தங்கம்; ராஷ்மிகாவுக்கு வெள்ளி

post image

ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வெள்ளிக்கிழமை இரு பிரிவுகளில் பதக்கம் கிடைத்தது.

10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆடவர் தனிநபர் பிரிவில், ஜோனதன் காவின் ஆன்டனி 244.8 புள்ளிகளுடன் தங்கம் வென்றார். இத்தாலியின் லுகா ஆரிகி வெள்ளியும் (236.3), ஸ்பெயினின் லூகாஸ் சான்செஸ் வெண்கலமும் (215.1) பெற்றனர்.

இறுதிச்சுற்று களத்திலிருந்த மற்றொரு இந்தியரான சிராக் சர்மா, 115.6 புள்ளிகளுடன் 8-ஆம் இடம் பிடித்தார். இதர இந்தியர்களில், கபில், தைரிய பிரசார், விஜய் தோமர் ஆகியோர் தகுதிச்சுற்றுடன் வெளியேறினர்.

அதிலேயே மகளிர் தனிநபர் பிரிவில், ராஷ்மிகா சாகல் 236 புள்ளிகளுடன் வெள்ளி பெற்றார். பொதுப் போட்டியாளராகப் பங்கேற்ற ரஷியாவின் எவ்லினா ஷெய்னா தங்கமும் (240), ஈரானின் ஃபடேமி ஷெகாரி வெண்கலமும் (213) வென்றனர். இறுதிச்சுற்றிலேயே இதர இந்தியர்களில், வன்ஷிகா செளதரி 5-ஆம் இடமும் (174), மோஹினி சிங் 6-ஆம் இடமும் (153) பிடித்தனர். லக்ஷிதா, ஊர்வா செளதரி ஆகிய இந்தியர்கள் தகுதிச்சுற்றுடன் வெளியேறினர்.

முதலிடம்: பதக்கப் பட்டியலில் தற்போது இந்தியா, 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்களுடன் முதலிடத்தில் இருக்கிறது.

ஷாருக்கானை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் ஷாருக்கனை இயக்கியுள்ளார். ஜவான், டங்கி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் தற்போது கிங் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆக்சன் படமாக இது உர... மேலும் பார்க்க

தினேஷ் பிறந்த நாள்... வேட்டுவம் கிளிம்ஸ் வெளியீடு!

வேட்டுவம் திரைப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் விடியோ வெளியாகியுள்ளது.நடிகர் அட்டகத்தி தினேஷ் தன் பெயரை வி. ஆர். தினேஷ் என மாற்றியுள்ளார். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான தண்டகாரண்யம் திரைப்படம் நல்ல வரவே... மேலும் பார்க்க

வேடுவன் டிரைலர்!

நடிகர் கண்ணா ரவி நடித்த வேடுவன் தொடரின் டிரைலர் வெளியாகியுள்ளது. கைதி, லவ்வர் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் கண்ணா ரவி. முழு கமர்சியல் கதைகளைத் தாண்டி ரத்தசாட்சி போன்ற சமூக ரீதியான கதையையும் தேர... மேலும் பார்க்க

சினிமா எனக்கு எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறது: விக்ரம் பிரபு

நடிகர் விக்ரம் பிரபு கலைமாமணி விருது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களுக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்குத் தேர்வான பலரும் தங்கள் ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் ஸ்ரீ மாரியம்மனுக்கு புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்காரம்!

காஞ்சிபுரம் கணேஷ் நகரில் அமைந்துள்ள தும்பவனம் மாரியம்மனுக்கு நவராத்திரி விழாவையொட்டி புதிய ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கப்பட்டு சனிக்கிழமை சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.காஞ்சிபுரம் மாநகராட்சி 48வது... மேலும் பார்க்க

இவை ஏஐ புகைப்படங்கள் அல்ல: சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படங்கள் அடங்கிய விடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.அந்தப் பதிவில் இவையெல்லாம் ஏஐ-ஆல் உருவாக்கப்பட்டவை அல்ல, நிஜமான புகைப்படங்கள் என்று விளக்கம் அளித்... மேலும் பார்க்க