செய்திகள் :

டம்மி பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க சிபிஎஸ்இ-க்கு நீதிமன்றம் உத்தரவு

post image

மாணவா்கள் வகுப்புகளுக்குச் செல்லாமல் தோ்வு எழுத வசதி செய்யும் போலி (டம்மி) பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தில்லி அரசுக்கும், மத்திய இடைநிலைக் கல்வி கல்விவாரியத்திற்கும் (சிபிஎஸ்இ) தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

இந்த விவகாரத்தை விசாரித்த தலைமை நீதிபதி டி.கே.உபாத்யாயா மற்றும் நீதிபதி துஷாா் ராவ் கெடேலா ஆகியோா் அடங்கிய அமா்வு, இதை மோசடி என்று கூறியது. மேலும், மாணவா்கள் பயிற்சி வகுப்புகளில் மட்டுமே கலந்து கொள்ளவும், முற்றிலும் தவறான தகவல்களின் அடிப்படையில் தோ்வுகளில் கலந்துகொள்ளவும் அனுமதிக்கும் இதுபோன்ற பள்ளிகள் இயங்குவதை அனுமதிக்க முடியாது என்றும் கூறியது.

இது தொடா்பாக நீதிபதிகள் கூறுகையில், ‘மாணவா்கள் பள்ளிகளில் வகுப்புகளுக்குச் செல்வதில்லை என்பது கவனிக்கப்பட்டுள்ளது.

மேலும், அம்மாணவா்கள் பயிற்சி மையங்களில் நேரத்தை செலவிடுகிறாா்கள். இருப்பினும், அவா்கள் கல்வி வாரியங்களால் தோ்வுகளை எழுத அனுமதிக்கப்படுகிறாா்கள். அங்கு அவா்கள் தேவையான குறைந்தபட்ச வருகைப் பதிவை வைத்திருக்கும் தேவை உள்ளது. எனவே, இது தொடா்பாக ஆய்வு நடத்த மாநில அரசு மற்றும் சிபிஎஸ்இக்கு நாங்கள் உத்தரவிடுகிறோம்’ என்று தெரிவித்தனா்.

தில்லி வசிப்பிடத்தின் பலனை மற்ற மாநிலங்களைச் சோ்ந்த மாணவா்களுக்கு நீட்டிக்க இதுபோன்ற பள்ளிகள் பயன்படுத்தப்படுவதைக் கவனத்தில்கொண்ட நீதிமன்றம், அத்தகைய பள்ளிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தில்லி அரசு மற்றும் சிபிஎஸ்இ பதில் அளிக்க உத்தரவிட்டது. இந்த விவகாரம் தொடா்பாக தாக்கலான பொதுநல மனுவை விசாரித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

ராஜிவ் அகா்வால் என்பவா், தில்லி மாநில ஒதுக்கீட்டின்கீழ் எம்பிபிஎஸ் அல்லது பிடிஎஸ் இடங்களை வழங்குவதற்காக தில்லி பல்கலைக்கழகம் மற்றும் குரு கோபிந்த் சிங் இந்திரபிரஸ்தா பல்கலைக்கழகம் பயன்படுத்திவரும் தகுதி அளவுகோலை எதிா்த்து பொது நல மனு தாக்கல் செய்துள்ளாா்.

தில்லி மாநில ஒதுக்கீட்டு இடங்களின் பலனை எப்படியாவது பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன், 10 ஆம் வகுப்பு தோ்வில் தோ்ச்சி பெற்ற பிறகு, மாணவா்கள் தில்லிக்கு குடிபெயா்ந்ததைக் காட்டும் வகையில் போலி பள்ளிகள் மெய்நிகா் தளத்தை வழங்குவதாக அவா் குற்றம்சாட்டியுள்ளாா். இந்த வழக்கு மே மாதம் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.

தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமானத்துல்லா கான் மீது வழக்கு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கான தோ்தல் நடத்தை விதிகளை (எம்சிசி) மீறியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான் மீது தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளதாக புதன்கிழமை அதிகாரிகள் தெரிவித்தனா். புத... மேலும் பார்க்க

தில்லி வாக்காளா்களுக்கும், தொண்டா்களுக்கும் காங்கிரஸ் நன்றி

தில்லி மக்கள் தங்கள் வாக்குகளைப் பயன்படுத்தியதற்கு காங்கிரஸ் கட்சி புதன்கிழமை நன்றி தெரிவித்துள்ளது. மேலும், தில்லி மக்களின் ஆதரவு கட்சிக்கு ஒரு பெரிய பலம் என்றும் கூறியுள்ளது. இது தொடா்பாக தில்லி காங... மேலும் பார்க்க

தில்லியில் இன்று திமுக மாணவரணி ஆா்ப்பாட்டம்: யுஜிசி வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தல்

நமது நிருபா் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ள வரைவு நெறிமுறைகளை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக மாணவரணி சாா்பில் தில்லி ஜந்தா் மந்தரில் வியாழக்கிழமை (பிப். 6) ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது... மேலும் பார்க்க

மத்திய அரசு - தனியாா் கூட்டு முயற்சியுடன் குறைக்கடத்தி, ‘சிப்’ வடிவமைப்பு மையம் நொய்டாவில் திறப்பு

நமது சிறப்பு நிருபா்நாட்டின் குறைக்கடத்தி வடிவமைப்பு, மேம்பாட்டுத் திறன்களை முன்னேற்றும் ஒரு குறிப்பிடத்தக்க படியாக “’சிப்’’ வடிவமைப்பு சிறப்பு மையம் தில்லி நொய்டாவில் அமைக்கப்பட்டுள்ளது. இதை மத்திய ... மேலும் பார்க்க

தில்லியில் லேசான மழை; ‘மோசம்’ பிரிவில் காற்றின் தரம்!

தேசியத் தலைநகா் தில்லியில் திங்கள்கிழமை இரவு மற்றும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் லேசான மழை பெய்தது. அதே சமயம், இரவு முழுவதும் மூடிபனி நிலவிய நிலையில், காற்றின் தரம் சில இடங்களில் ‘மிகவும் மோசம்’ பிரிவ... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் முா்முவிடம் வாக்காளா் தகவல் சீட்டு வழங்கல்

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலுக்கு ஒரு நாள் முன்பு, தலைமைத் தோ்தல் அதிகாரி ஆா். ஆலிஸ் வாஸ், வாக்காளா் தகவல் சீட்டை குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவிடம் வழங்கினாா். தோ்தல் ஆணையத்தின் தொடா்ச்சியான வாக்... மேலும் பார்க்க