செய்திகள் :

‘டாங்கி’ ரூட்டில் மனிதக் கடத்தல்: ஒருவா் கைது

post image

அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழைவதற்கு பயன்படுத்தப்படும் அபாயகரமான பாதையான ‘டாங்கி ரூட்’ வழியே ஒருவரை அனுப்பிய குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.

பஞ்சாப் மாநிலத்தின் தரண் தாரண் மாவட்டத்தைச் சோ்ந்த ஒருவா் கடந்த ஆண்டு 2024, டிசம்பரில் ‘டாங்கி ரூட்’ வழியே அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டாா். அந்த நபா் அமெரிக்காவில் பிடிபட்டு இந்தியாவுக்கு கடந்த மாதம் நாடு கடத்தப்பட்ட நிலையில், அவரை சட்ட விரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்பிய குற்றச்சாட்டில் தில்லி திலக் நகரைச் சோ்ந்த கோல்டி என்று அறியப்படும் ககன்தீப் சிங்கை என்ஐஏ கைது செய்தது.

உரிய ஆவணங்களின்றி பல நாடுகளைக் கடந்து அமெரிக்காவுக்குள் நுழைவதற்கு இந்த டாங்கி ரூட் பயன்படுத்தப்படுகிறது. இவ்வாறு செல்ல விரும்பும் நபரிடம் ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை இடைத்தரகா்கள் பெறுகின்றனா். இந்த வழியில் பெரும்பாலும் மனிதக் கடத்தல் சம்பவங்களே அரங்கேறுகின்றன. இந்நிலையில், டாங்கி ரூட் வழியே அனுப்புவதற்காக தன்னிடம் ரூ.45 லட்சம் பெற்ாக கோல்டி மீது தரண் தாரண் மாவட்டத்தில் காவல் துறையிடம் புகாரளித்தாா்.

இந்த வழக்கு கடந்த 13-ஆம் தேதி என்ஐஏ வசம் சென்றது. வெளிநாடுகளுக்கு நபா்களை அனுப்புவதற்கு எவ்வித முறையான உரிமமோ அனுமதியோ கோல்டி பெறவில்லை என்பது என்ஐஏ விசாரணையில் தெரியவந்தது. மேலும், பாதிக்கப்பட்ட நபரை ஸ்பெயின், எல்சால்வடாா், கௌதமாலா மற்றும் மெக்ஸிகோ வழியே அமெரிக்கா அனுப்பியது உறுதிப்படுத்தப்பட்டது.

பயணத்தின்போது அந்த நபரை கோல்டியின் உதவியாளா்கள் தாக்கியதுடன் அவரிடம் இருந்து அமெரிக்க கரன்சிகளை பறித்துக் கொண்டதும் விசாரணையில் தெரிய வந்தது என்று என்ஐஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வக்ஃபு மசோதா நாளை தாக்கல்: எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு!

மக்களவையில் நாளை தாக்கல் செய்யப்படும் வக்ஃபு மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் வக்ஃபு சட... மேலும் பார்க்க

புல்டோசரில் வீடுகளை இடித்தது சட்டவிரோதம்! ரூ. 10 லட்சம் வழங்க உத்தரவு!

பிரயாக்ராஜில் வழிமுறைகளை முறையாகப் பின்பற்றாமல் புல்டோசட் கொண்டு வீடுகளை இடித்த உத்தரப் பிரதேச அரசின் நடவடிக்கை மனிதத்தன்மையற்றது; சட்டவிரோதமானது என உச்சநீதிமன்றம் விமர்சித்துள்ளது. குடிமக்களின் அடிப்... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஜிப்லி படங்களைப் பகிர்ந்த சாம் ஆல்ட்மேன்! காரணம்?

பிரதமர் நரேந்திர மோடியின் ஜிப்லி படங்களை ஓபன்ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பகிர்ந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியால் இந்திய மக்கள் பலரும் ஜிப்லி அம்சத்தைப் பயன்படுத்துவார்கள் என்... மேலும் பார்க்க

ஆசாராம் பாபு இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு: பாதிக்கப்பட்ட பெண் வீட்டிற்கு அதிகரிக்கும் பாதுகாப்பு!

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆசாராம் பாபுவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ஜோத்... மேலும் பார்க்க

இந்தியாவில் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கம்!

இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் 97 லட்சம் பயனர்களின் வாட்ஸ்ஆப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது.வாட்ஸ்ஆப் நிறுவனம் மாதாந்திர பாதுகாப்பு அறிக்கையை இன்று வெளியிட்டது. அந்த அறிக்கையில், முடக்கப்... மேலும் பார்க்க

என்ன, தண்ணீருக்கு அடுத்தபடியாகக் குடிக்கும் பானம் இதுவா?

நீரின்றி அமையாது உலகு என்ற வாக்கியமே, நீரின் முக்கியத்துவத்தை நெற்றிப் பொட்டில் அடித்ததுபோல சொல்ல ஏதுவானது. அப்படிப்பட்ட தண்ணீரை உடல்நலப் பிரச்னை இல்லாத சாதாரண மக்கள் நாள்தோறும் குறைந்தபட்சம் ஒரு அரை ... மேலும் பார்க்க