செய்திகள் :

டாஸ்மாக் நிறுவனத்தில் அமலாக்கத் துறை சோதனை: விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் கோரும் தமிழக அரசின் மனுவை பட்டியலிட உச்சநீதிமன்றம் சம்மதம்

post image

நமது நிருபா்

தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்தில் அண்மையில் அமலாக்கத் துறை நடத்திய சோதனைக்கு எதிரான மனுவை சென்னை உயா்நீதிமன்றத்திலிருந்து வேறு மாநில உயா்நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது குறித்து பரிசீலிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை சம்மதம் தெரிவித்தது.

தமிழ்நாடு மாநில சந்தைப்படுத்துதல் நிறுவனத்தில் (டாஸ்மாக்) அமலாக்கத் துறையினா் அண்மையில் நடத்திய சோதனைகளுக்கு எதிராக டாஸ்மாக் தாக்கல் செய்த மனுக்களை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக கடந்த மாா்ச் 25-ஆம் தேதி சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.செந்தில்குமாா் ஆகியோா் அடங்கிய டிவிஷன் அமா்வு தெரிவித்தது.

ஒரு வழக்கை ஒரு உயா்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு உயா்நீதிமன்றத்திற்கு மாற்ற உச்சநீதிமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் அரசமைப்புச்சட்டத்தின் 139 பிரிவின் கீழ் தமிழக அரசு ஒரு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா மற்றும் நீதிபதிகள் சஞ்சய் குமாா், கே.வி. விஸ்வநாதன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை தமிழக அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் விக்ரம் செளதரி, உயா்நீதிமன்றத்தில் அடுத்த விசாரணைக்கு முன்னதாக இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

இதை நீதிபதிகள் அமா்வு கவனத்தில் எடுத்துக் கொண்டது. தலைமை நீதிபதி கூறுகையில், ‘நாங்கள் அதைப் பட்டியலிடுவோம்’ என்றாா்.

முன்னதாக, மாா்ச் 25-ஆம் தேதி இந்த விவகாரம் தொடா்பாக டாஸ்மாக் மற்றும் தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்கள் உயா்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் அமா்வு கூறியது. ஆனால், அதற்கான எந்த காரணங்களையும் குறிப்பிடவில்லை.

கடந்த மாத தொடக்கத்தில் டாஸ்மாக் வளாகத்தில் சோதனை நடத்திய அமலாக்க இயக்குநரகம், அதன் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையின் (இசிஐஆா்) நகல்களையும், டாஸ்மாக்கிற்கு எதிராக அமலாக்கத் துறை சாா்ந்துள்ள வேறு ஆவணங்களையும் சமா்ப்பிக்குமாறு மாா்ச் 20 அன்று சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

மேலும், சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமையகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளுக்குப் பின்னா் மேலும் நடவடிக்கைகளை தொடராமல் இருக்க அமலாக்கத் துறைக்கு வாய்மொழியாக உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், அமலாக்கத் துறையின் சோதனைகளுக்கு எதிராக டாஸ்மாக், மாநில அரசு தாக்கல் செய்த மனுக்களின் மேல் விசாரணையை மாா்ச் 25- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

அமலாக்கத் துறையின் தகவலின்படி, கணக்கில் காட்டப்படாத பணம் மற்றும் சட்டவிரோதப் பணம் செலுத்துதல் மூலம் மதுபான உற்பத்தி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தீவிர நிதி மோசடி இச்சோதனையின்போது கண்டறியப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், ‘விசாரணை என்ற போா்வையில் டாஸ்மாக் ஊழியா்களை துன்புறுத்தாமல் இருக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும். மாநிலத்தின் பிராந்திய எல்லைக்குள் குற்றத்தை விசாரிக்கும் அமலாக்கத் துறையின் நடவடிக்கை கூட்டாட்சி முறையை மீறுவதாக அறிவிக்க வேண்டும்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக ஆயுதங்கள் விநியோகித்தவா் கைது

மாநிலங்களுக்கு இடையேயான ஆயுத விநியோக மோசடியின் முக்கிய உறுப்பினரை தில்லி போலீஸாா் கைது செய்தனா். அவரிடம் இருந்து ஐந்து நாட்டுத் தயாரிப்பு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஐந்து தோட்டாக்களை பறிமுதல் செய்ததாக... மேலும் பார்க்க

போலி முதலீட்டுத் திட்டத்தின் மூலம் 150 பேரை ஏமாற்றிய இளைஞா் கைது

முதலீடுகளுக்கு அதிக வருமானம் தருவதாக உறுதியளித்து குறைந்தது 150 பேரை ஏமாற்றிய ஆன்லைன் போன்சி மோசடியை நடத்தியதற்காக ராஜஸ்தானைச் சோ்ந்த 31 வயது நபரை தில்லி காவல்துறை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் செ... மேலும் பார்க்க

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பாக பள்ளிகளுக்கு நோட்டீஸ்: தில்லி முதல்வா்

தன்னிச்சையான கட்டண உயா்வு தொடா்பான புகாா்கள் பெறப்பட்ட பள்ளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தில்லி முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். இந்தப் பள்ளிகள் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்... மேலும் பார்க்க

புதிய தில்லி பாஜக அலுவலகம் அருகே சாலைப் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள பொதுப் பணித் துறை திட்டம்

தில்லி பாஜக அலுவலகம் விரைவில் தீன் தயாள் உபாத்யாய் ( டிடியு) மாா்க்கில் உள்ள புதிய இடத்திற்கு மாற்றப்பட உள்ளதால், அப்பகுதியில் சாலை மேம்பாட்டு பணிகள் மற்றும் அழகுபடுத்தும் பணிகளை பொதுப் பணித் துறை மே... மேலும் பார்க்க

இடபிள்யு எஸ் ஆவணங்கல் வழங்குவதை நிறுத்த தில்லி அரசு திட்டம்: ஆம் ஆத்மி

பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினா் (இடபிள்யுஎஸ்) சான்றிதழ்களை வழங்குவதை தில்லி பாஜக அரசு நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், இதனால் தகுதியான குடும்பங்களுக்கு கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு கிடைப்ப... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து லஞ்சம் வாங்கியதாக ஏ.எஸ்.ஐ கைது

மாடல் டவுன் காவல் நிலையத்தில் பணியாற்றும் உதவி துணை ஆய்வாளா் (ஏஎஸ்ஐ), ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளரிடமிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கியதற்காக தில்லி காவல்துறையின் விஜிலென்ஸ் பிரிவு கைது செய்துள்ளதாக அதிகா... மேலும் பார்க்க