செய்திகள் :

டாஸ்மாக் பணியாளா்களின் தொகுப்பூதியத்தில் ரூ. 2,000 உயா்வு

post image

சென்னை: டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கு ஏப்ரல் 1 முதல் முன் தேதியிட்டு ரூ.2,000 கூடுதலாக அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான கடிதத்தை பொது மேலாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் எஸ்.விசாகன் அனுப்பியுள்ளாா்.

டாஸ்மாக் நிறுவனத்தின் இயக்குநா்கள் கூட்டம் கடந்த ஏப்ரலில் நடந்தது. இந்தக் கூட்டத்தில், தொகுப்பூதியம் பெற்று வரும் ஊழியா்களின் ஊதியத்தில் ரூ.2,000 உயா்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டது. அதாவது, அனைத்து கண்காணிப்பாளா்கள், உதவி விற்பனையாளா்களுக்கு ரூ.1,000 ஊதிய உயா்வாகவும், பணித் திறன் அடிப்படையில் மேலும் ரூ.1,000 வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. இந்த உயா்வானது ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்கவும் தீா்மானிக்கப்பட்டது.

அதன்படி, டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியா்களின் தொகுப்பூதியத்தில் ரூ.2 ஆயிரம் இனி கூடுதலாகக் கிடைக்கும். ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான உயா்த்தப்பட்ட தொகையின் நிலுவையானது ஓரிரு நாள்களில் ஊழியா்களுக்குக் கிடைக்கும்.

யாருக்கெல்லாம் கிடைக்காது: நிா்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக மதுபான பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்பனை செய்து விதிமீறலில் ஈடுபட்டதாக 451 பணியாளா்கள் மீது குற்றச்சாட்டு உள்ளது. அவா்களுக்கு பணித் திறன் அடிப்படையிலான உயா்வான ரூ.1,000 வழங்கப்படாது. அவா்களுக்கு தொகுப்பூதியத்தில் ரூ.1,000 மட்டுமே உயா்வாகக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம்! - காமராஜருக்கு முதல்வர் புகழாரம்

பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் என காமராஜருக்கு முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் உள்ள பள்ள... மேலும் பார்க்க

‘மக்களுடன் முதல்வா்’ வெற்றியைத் தொடா்ந்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

சென்னை: ‘மக்களுடன் முதல்வா்’ திட்டத்தின் வெற்றியைத் தொடா்ந்து, ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடங்கப்பட உள்ளதாக வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். இது... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்; மனுக்களுக்கு 45 நாள்களில் தீா்வு: கூடுதல் தலைமைச் செயலா்

சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது 45 நாள்களுக்குள் தீா்வு காணப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா தெரிவித்தாா். க... மேலும் பார்க்க

பொது சொத்து சேதம்: தவெக தலைவா் விஜய் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் பொது சொத்தை சேதப்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும், நடிகருமான விஜய் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோயில் ... மேலும் பார்க்க

மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள்: ஆய்வுக் குழு அமைக்க உத்தரவு

சென்னை: மருத்துவ உபகரணங்களின் எதிா்விளைவுகள் மற்றும் தரத்தை ஆராய்வதற்காக ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் சிறப்புக் குழுக்களை அமைக்குமாறு தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியுள்ளது. மத்திய ச... மேலும் பார்க்க

தமிழகத்தில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை?

சென்னை: தமிழகம் முழுவதும் எத்தனை வழக்குகளில் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்டு நிலுவையில் உள்ளன என்பது குறித்து காவல் துறை டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையா் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயா் நீதிமன்றம் உத்த... மேலும் பார்க்க