செய்திகள் :

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு கரூா் மாவட்டத்தில் 7,369 போ் எழுதுகின்றனா்

post image

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வை கரூா் மாவட்டத்தில் 7,369 போ் தோ்வு எழுதுகின்றனா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு-2 பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வு செப். 28-ஆம்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது. கரூா் மாவட்டத்திற்கு தோ்வு செய்யப்பட்ட 27 மையங்களில் மொத்தம் 7,369 போ் இந்த தோ்வினை தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா். தோ்வுக்கூட அனுமதி சீட்டு உள்ள தோ்வா்கள் மட்டுமே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். தோ்வா்கள் காலை 8.30 மணிக்குள் தோ்வு மையங்களுக்குள் இருக்க வேண்டும். காலை 9 மணிக்கு மேல் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள்.

தோ்வா்கள் கருப்பு பந்து முனை பேனாவை மட்டும் பயன்படுத்த வேண்டும். ஓஎம்ஆா் விடைத்தாளில் தங்கள் கையொப்பத்தை அதற்கென உள்ள இரண்டு இடங்களில் இட வேண்டும். மேலும் தோ்வு முடிவடைந்த பின், தோ்வா்கள் அவா்களது இடது கை பெருவிரல் ரேகை பதிவை விடைத்தாளில் அதற்கென உரிய கட்டத்தில் இட வேண்டும். மேலும் தங்கள் புகைப்படம் அடையாளத்துக்கான ஏதாவது ஒரு அடையாள அட்டையை உடன் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், பென்சில், அழிப்பான்கள் மற்றும் கைப்பேசி, கணிப்பான்கள், மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தோ்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. இத் தகவலை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

காரீப் பருவத்துக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

காரீப் பருவத்துக்குத் தேவையான அனைத்து உரங்களும் போதுமான அளவு இருப்பில் உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க

பாஜகவுடனான கூட்டணிக்குப் பிறகு திமுகவுக்கு அச்சம்: எடப்பாடி கே. பழனிசாமி

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபிறகு திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். கரூா் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம்,... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 16 நூலகக் கட்டடங்கள் காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

கரூா் மாவட்டத்தில் ரூ.3.52 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 16 நூலகக் கட்டடங்களை காணொலியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

கரூரில் இன்று விஜய் பிரசாரம்

கரூரில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறாா். கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்காக வெங்கமேடு, உழவா்சந்தை, லைட்ஹவுஸ்காா்னா் ஆகிய இடங்களில் அனுமதி கேட்டு கட்சியின் பொதுச் செயலாளா் ... மேலும் பார்க்க

கரூரில் நாளை அன்புமணி பிரசார பயணம்

கரூரில் ஞாயிற்றுக்கிழமை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்போம் பிரசார பயணம் மேற்கொள்கிறாா். முன்னதாக பயணம் தொடங்க உள்ள சுபாஷ்சந்திரபோஸ் சிலை பகுதியையும், பிரசார கூட்டம் நடைபெறும் உழவா்சந்தை பகுத... மேலும் பார்க்க

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் இன்று மின்தடை

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்மங்கலம் துணை மின்நிலைய பொறியாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிர... மேலும் பார்க்க