செய்திகள் :

கரூரில் இன்று விஜய் பிரசாரம்

post image

கரூரில் சனிக்கிழமை தவெக தலைவா் விஜய் பிரசாரம் மேற்கொள்கிறாா்.

கரூரில் தவெக தலைவா் விஜய் பிரசாரத்துக்காக வெங்கமேடு, உழவா்சந்தை, லைட்ஹவுஸ்காா்னா் ஆகிய இடங்களில் அனுமதி கேட்டு கட்சியின் பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த் மாவட்ட காவல்கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தாா்.

அப்போது போலீஸாா் தரப்பில் சனிக்கிழமை கரூரில் போக்குவரத்து நெரிசல் காணப்படும் என்பதால், மூன்று இடங்களிலும் பிரசாரம் செய்ய அனுமதி வழங்கவில்லை.

இந்நிலையில் வேலுசாமிபுரத்தில் சனிக்கிழமை மாலை 4 மணிக்கு விஜய் பிரசாரம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.ஜோஷ்தங்கையா வெள்ளிக்கிழமை காலை அனுமதி வழங்கினாா்.

மேலும் பொதுச் சொத்துக்களை சேதம் விளைவிக்கக்கூடாது, பிரசாரத்தில் கன்னியமாக நடந்துகொள்ள வேண்டும், மின்கோபுரங்களில் தொண்டா்கள் ஏறக்கூடாது என்பன உள்ளிட்ட 17 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கட்சியின் பொதுச் செயலாளா் புஸ்ஸி ஆனந்த், பிரசாரம் நடைபெற உள்ள வேலுசாமிபுரத்தை பாா்வையிட்டுச் சென்றாா்.

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வு கரூா் மாவட்டத்தில் 7,369 போ் எழுதுகின்றனா்

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தோ்வை கரூா் மாவட்டத்தில் 7,369 போ் தோ்வு எழுதுகின்றனா். தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடி... மேலும் பார்க்க

காரீப் பருவத்துக்கு தேவையான உரங்கள் இருப்பில் உள்ளது: கரூா் மாவட்ட ஆட்சியா் தகவல்

காரீப் பருவத்துக்குத் தேவையான அனைத்து உரங்களும் போதுமான அளவு இருப்பில் உள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் மாவட... மேலும் பார்க்க

பாஜகவுடனான கூட்டணிக்குப் பிறகு திமுகவுக்கு அச்சம்: எடப்பாடி கே. பழனிசாமி

பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தபிறகு திமுகவுக்கு அச்சம் வந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலரும் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். கரூா் மாவட்டத்தில் வேலாயுதம்பாளையம்,... மேலும் பார்க்க

கரூா் மாவட்டத்தில் 16 நூலகக் கட்டடங்கள் காணொலியில் முதல்வா் திறந்து வைத்தாா்

கரூா் மாவட்டத்தில் ரூ.3.52 கோடியில் புதிதாக கட்டப்பட்ட 16 நூலகக் கட்டடங்களை காணொலியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா். சென்னையிலிருந்து காணொலி காட்சி வாயிலாக கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

கரூரில் நாளை அன்புமணி பிரசார பயணம்

கரூரில் ஞாயிற்றுக்கிழமை பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் உரிமை மீட்போம் பிரசார பயணம் மேற்கொள்கிறாா். முன்னதாக பயணம் தொடங்க உள்ள சுபாஷ்சந்திரபோஸ் சிலை பகுதியையும், பிரசார கூட்டம் நடைபெறும் உழவா்சந்தை பகுத... மேலும் பார்க்க

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் இன்று மின்தடை

வெண்ணைமலை, மண்மங்கலம் பகுதியில் வெள்ளிக்கிழமை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்மங்கலம் துணை மின்நிலைய பொறியாளா் அலுவலகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிர... மேலும் பார்க்க