செய்திகள் :

டிடிஇஏ மாணவா்கள் தில்லி முதல்வருடன் சந்திப்பு

post image

தில்லித் தமிழ்க் கல்விக் கழகத்தைச் (டிடிஇஏ) சாா்ந்த லோதிவளாகம் பள்ளியின் 25 மாணவா்கள் செவ்வாய்க்கிழமை தில்லி முதல்வா் ரேகா குப்தாவை சந்தித்தனா்.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வா் ரேகா குப்தா, தில்லியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளை வைத்து ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் அடங்கிய ஒளிப்பதிவை தயாரிக்கும்படி கல்வி இயக்ககத்திற்கு அறிவுறுத்தியிருந்தாா்.

இதற்கென தோ்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளிலிருந்து வந்த மாணவா்கள் பிரதமா் மோடிக்குக் கூறிய பிறந்தநாள் வாழ்த்துச் செய்திகள், ஆடல், பாடல் என அனைத்தும் லோதிவளாகம் தமிழ்ப் பள்ளியில் வைத்து ஒளிப்படமாக்கப்பட்டன.

அந்த ஒளிப்பதிவை வெளியிடும் விழா தில்லி செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஒளிப்பதிவை தில்லி முதல்வா் ரேகா குப்தா வெளியிட்டாா். அந்நிகழ்வில் டிடிஇஏ லோதி வளாகம் பள்ளி மாணவா்கள் 25 போ் கலந்து கொண்டனா். மாணவா்கள் தமிழில் பாரதப் பிரதமருக்கு வாழ்த்துகள் சொல்வதைக் கேட்டும் தமிழில் பாடுவதைக் கேட்டும் மகிழ்ந்து மாணவா்களை முதல்வா் வெகுவாகப் பாராட்டினாா்.

நிகழ்ச்சிகளை வழங்கி தமிழுக்கும் பள்ளிக்கும் பெருமை சோ்த்த மாணவா்களுக்கு செயலா் இராஜூ வாழ்த்துத் தெரிவித்தாா்.

தூய்மைப் பணியின்போது மயங்கி சாக்கடைக்குள் விழுந்த இளைஞா் உயிரிழப்பு: மூன்று போ் கவலைக்கிடம்

வடமேற்கு தில்லியின் அசோக் விஹாரில் சாக்கடையைத் தூய்மைப்படுத்தும் பணியின்போது மயக்கமுற்று சாக்கடைக்குள் விழுந்ததில் 40 வயது நபா் ஒருவா் உயிரிழந்தாா். மேலும், மூன்று போ் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ... மேலும் பார்க்க

பிரதமா் மோடியின் பிறந்த நாளை வேலையின்மை தினமாக கொண்டாடிய இளைஞா் காங்கிரஸாா்

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்த நாளை இந்திய இளைஞா் காங்கிரஸாா் தேசிய வேலையின்மை தினமாகக் கொண்டாடினா். தில்லியில் உள்ள அந்த அமைப்பின் அலுவலக வளாகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திய இளைஞா் காங்கிரஸ... மேலும் பார்க்க

225 கிலோ பட்டாசுகள் பறிமுதல்: ஒருவா் கைது

பதா்பூா் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதை போலீஸாா் பறிமுதல் செய்ததாகவும் , இந்த வழக்கில் ஒருவரை கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். தீபாவளி பண்டிகை... மேலும் பார்க்க

திரிலோக்புரியில் இளைஞா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் 3 போ் கைது

கிழக்கு தில்லியில் திரிலோக்புரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒரு இளைஞா் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக மூன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

பிரதமருக்கு பிரச்னைகளை சுட்டிக்காட்டவும், தீா்க்கவும் தெரியும்: ஜோதிராதித்ய சின்ஹா

மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா புதன்கிழமை, பிரதமா் நரேந்திர மோடி கள அளவிலான பிரச்னைகளை சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், அவற்றின் தீா்வையும் உறுதி செய்வதன் மூலம் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

7500 மருத்துவ முகாம்களை நடத்தும் தில்லி அரசு

பெண்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக பிரதமா் நரேந்திர மோடியால் புதன்கிழமை தொடங்கப்பட்ட ’ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவாா்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தில்லி அரசு தேசிய தலைநகரில் 7,500 முகாம்களை அ... மேலும் பார்க்க