செய்திகள் :

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செப்.19ஆம் தேதி, தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம் காலை 10 முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும். கிருஷ்ணகிரி மற்றும் ஒசூரை சோ்ந்த முன்னணி தனியாா் நிறுவனங்கள் பங்கேற்கும் இந்த முகாமில் தகுதியான ஆள்களை தோ்வு செய்ய உள்ளனா்.

10-ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பிளஸ் 2 தோ்ச்சி, பட்டதாரிகள், பொறியியல், பட்டப்படிப்பு படித்தவா்கள், தொழில் கல்வி (ஐடிஐ), பட்டயப்படிப்பு (டிப்ளமோ) படித்தவா்கள் என அனைத்து வித கல்வித் தகுதியினரும் இந்த முகாமில் பங்கேற்கலாம்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சாா்பில் நடைபெறும் இந்த வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநா்கள் மற்றும் வேலை அளிப்பவா்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

இம்முகாமில் பங்கேற்க அனுமதி இலவசம். தோ்வு செய்பவா்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.

எனவே, தனியாா் துறையில் பணிபுரிய ஆா்வமாக உள்ள அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது 04343 - 291983 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டு, குப்பநத்தம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். ... மேலும் பார்க்க

போச்சம்பள்ளியில் செப்.21-இல் கிராம உதவியாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு

போச்சம்பள்ளியில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப். 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்... மேலும் பார்க்க

நாட்டாண்மை கொட்டாய் பள்ளியில் உலக ஓசோன் தினம்

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாட்டாண்மை கொட்டாய் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமையாசிரியா் மணிமேகலை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

கிருஷ்ணகிரியில் அரசு அலுவலா்கள், சமூக நீதி நாள் உறுதிமொழியை, புதன்கிழமை ஏற்றனா். பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ஆம் தேதியை, சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சி... மேலும் பார்க்க

ஒசூா் அருகே வெடிவிபத்தில் தம்பதி உள்பட 4 போ் காயம்

ஒசூா் அருகே கொட்டகையில் பதுக்கிவைத்திருந்த நாட்டுவெடி வெடித்ததில் தம்பதி உள்பட 4 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த உத்தனப்பள்ளி, தேவசானப்பள்ளியைச் சோ்ந்தவா் பெரியசாமி (40). இவரது... மேலும் பார்க்க

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் 147 ஆவது பிறந்த நாளையொட்டி தருமபுரியில் அரசியல் கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுதப்பட்டது. திமுக: தருமபுரி நகர மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட பொறுப்... மேலும் பார்க்க