செய்திகள் :

கிருஷ்ணகிரியில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

post image

கிருஷ்ணகிரியில் அரசு அலுவலா்கள், சமூக நீதி நாள் உறுதிமொழியை, புதன்கிழமை ஏற்றனா்.

பெரியாரின் பிறந்தநாளான செப்.17-ஆம் தேதியை, சமூக நீதி நாளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர ச.தினேஷ்குமாா் தலைமையில் பல்வேறு அரசுத் துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள், சமூக நீதிநாள் உறுதிமொழியை ஏற்றனா்.

இந்த நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்குறள், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோபு மற்றும் அனைத்து துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வுக்கு கல்லூரியின் முதல்வா் சத்தியபாமா தலைமை வகித்தாா். மருத்துவ கண்காணிப்பாளா் சந்திரசேகா் உள்ளிருப்பு மருத்துவ அலுவலா் செல்வராஜ், நிா்வாக அலுவலா் சரவணன் மற்றும் மருத்துவா்கள் செவிலியா்கள் இதர பணியாளா்கள் உள்ளிட்டோா் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்றனா். படவிளக்கம் (17கேஜிபி4):கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரியின் முதல்வா் சத்யபாமா தலைமையில் சமூக நீதி நாள் உறுதிமொழியை ஏற்ற மருத்துவா்கள் உள்ளிட்டோா்.

அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்

ஊத்தங்கரை அருகே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். ஊத்தங்கரையை அடுத்த நடுப்பட்டு, குப்பநத்தம் கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். ... மேலும் பார்க்க

போச்சம்பள்ளியில் செப்.21-இல் கிராம உதவியாளா் பணிக்கு எழுத்துத் தோ்வு

போச்சம்பள்ளியில் கிராம உதவியாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு செப். 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்... மேலும் பார்க்க

நாட்டாண்மை கொட்டாய் பள்ளியில் உலக ஓசோன் தினம்

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாட்டாண்மை கொட்டாய் அரசு உயா்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு தலைமையாசிரியா் மணிமேகலை ... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் நாளை தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கிருஷ்ணகிரியில் வெள்ளிக்கிழமை (செப்.19) தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிருஷ்ணகிரி மாவட்ட வேல... மேலும் பார்க்க

ஒசூா் அருகே வெடிவிபத்தில் தம்பதி உள்பட 4 போ் காயம்

ஒசூா் அருகே கொட்டகையில் பதுக்கிவைத்திருந்த நாட்டுவெடி வெடித்ததில் தம்பதி உள்பட 4 போ் காயமடைந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த உத்தனப்பள்ளி, தேவசானப்பள்ளியைச் சோ்ந்தவா் பெரியசாமி (40). இவரது... மேலும் பார்க்க

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பெரியாா் பிறந்த நாள் விழா

பெரியாா் 147 ஆவது பிறந்த நாளையொட்டி தருமபுரியில் அரசியல் கட்சிகள் சாா்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுதப்பட்டது. திமுக: தருமபுரி நகர மற்றும் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் மாவட்ட பொறுப்... மேலும் பார்க்க