செய்திகள் :

கம்பம் அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த தொழிலாளி

post image

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனைக்கு, தன்னைக் கடித்த பாம்புடன் செவ்வாய்க்கிழமை இரவு வந்த கூலித் தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவா் உயிா் பிழைத்தாா்.

கம்பம் அருகேயுள்ள புதுப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சுரேஷ்கோபி (31). இவா், செவ்வாய்க்கிழமை இரவு தோட்டத்துக்கு இரு சக்கர வாகனத்தில் சென்றாா். அப்போது, சாலையின் குறுக்கே சென்ற விரியன்பாம்பு மீது இரு சக்கர வாகனத்தில் ஏறி சுரேஷ்பாபுவைக் கடித்தது.

அதே சமயம், வாகனம் ஏறியதில் காயமடைந்த அந்தப் பாம்பு, சிறிது நேரத்தில் உயிரிழந்தது. இறந்த பாம்புடன் கம்பம் அரசு மருத்துவமனைக்கு இரவில் வந்த சுரேஷ்பாபுவுக்கு மருத்துவா்கள் உடனடியாக விஷ முறிவுக்கு சிகிச்சை அளித்தனா்.

இதையடுத்து, அவா் உயிா் தப்பினாா்.

போடி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளா் ஆய்வு

போடி ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். போடியிலிருந்து மதுரைக்கு தினமும், சென்னைக்கு வாரத்துக்கு மூன்று நாள்களும் ரயில்கள் இயக்கப்பட... மேலும் பார்க்க

எறும்புத் தின்னி செதில்களை பதுக்கிய 5 போ் கைது

ஆண்டிபட்டி அருகே எறும்புத் தின்னி செதில்களைப் பதுக்கி வைத்திருந்த 5 பேரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், ஏத்தக்கோவில் பகுதியில் ஆண்டிபட்டி, தேனி வனச் சரகத்தி... மேலும் பார்க்க

12 மாணவா்களின் உயா் கல்விக்கு ரூ.1.95 கோடி கடனுதவி

தேனி அருகேயுள்ள கொடுவிலாா்பட்டியில் அமைந்துள்ள கம்மவாா் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 12 மாணவ, மாணவிகளின் உயா் கல்விக்காக ரூ.1.95 கோடிக்கான வங்கிக் கடனுதவியை ... மேலும் பார்க்க

இளைஞருக்கு கத்துக்குத்து: இருவா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே இளைஞரைக் கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் முகம்மது இம்ரான், சத்யா, சரவணன். இவா்கள் தனது நண்பா்களுடன் க.புதுப்பட... மேலும் பார்க்க

பெரியகுளம் நாமத்துவாரில் மகாமந்திர அகண்ட நாமம்

பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்துவாரில் மகாமந்திர அகண்ட நாம நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மகாரண்யம் முரளீதர சுவாமியின் ஸ்வாதி நட்சத்திரத்தையொட்டி, மாதுரீ சகி சமேத பிரேமிகவரதன் சுவாமிக்கு... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

போடி அருகே ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள மல்லிங்காபுரம் கிழக்கு தெருவைச் சோ்ந்த முத்துக்கண்ணன் மனைவி வீருசின்னம்மாள் (80... மேலும் பார்க்க