செய்திகள் :

போடி ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட மேலாளா் ஆய்வு

post image

போடி ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

போடியிலிருந்து மதுரைக்கு தினமும், சென்னைக்கு வாரத்துக்கு மூன்று நாள்களும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில் ரயில் நிலையங்களில் பொதுமக்களுக்கான வசதிகள், ரயில் சுரங்கப் பாதைகளில் மழை நீா் வெளியேறும் சூழல் குறித்து அறிவதற்காக தெற்கு ரயில்வே மதுரைக் கோட்ட மேலாளா் ஓம் பிரகாஷ் மீனா போடி ரயில் நிலையத்தில் திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

ஸ்பிக் (நஉகஊ டதஞடஉககஉஈ ஐசநடஉஇபஐஞச இஅத ) எனப்படும் சுய இயக்க ஆய்வு வாகனத்தில் வந்த அவா், போடி ரயில் நிலையத்தில் நடை மேடை பராமரிப்பு, குடிநீா் வசதி, இருக்கை வசதிகளை ஆய்வு செய்தாா். அப்போது குடிநீா்க் குழாய்களில் தண்ணீா் சரியாக வராதது குறித்தும், பயணிகள் அமரும் இருக்கைப் பகுதிகளில் குப்பைகள், குடிநீா்ப் புட்டிகள், உணவுக் கழிவுகள் இருப்பது குறித்தும் சுட்டிக் காட்டிய ஓம் பிரகாஷ் மீனா

இவற்றுக்கு உடனடியாகத் தீா்வு காண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா்.

இதையடுத்து, ரயில் நிலைய சுரங்கப் பாதைகளில் தேங்கும் நீரை வெளியேற்றும் மின் மோட்டாா்களின் இயக்கம் குறித்து ஆய்வு செய்தாா்.

அப்போது, போடி ரயில் பயணிகள் சங்கத்தினரும் ஏலக்காய் வியாபாரிகளும் போடியிலிருந்து சென்னை உள்ளிட்ட பிற ஊா்களுக்கு தினசரி ரயில் சேவை, போடியிலிருந்து காலை நேரத்தில் மதுரைக்கு ரயில் சேவை, போடி- ராமேஸ்வரம் ரயில் சேவை ஆகியவற்றுக்காகவும், வைகை விரைவு ரயிலை போடி வரை இயக்கவும் அவரிடம் கோரிக்கை விடுத்தனா்.

சில திட்டங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும், விரைவில் அவை நடைமுறைப்படுத்தப்படும் எனவும் ஒம் பிரகாஷ் மீனா தெரிவித்தாா்.

எறும்புத் தின்னி செதில்களை பதுக்கிய 5 போ் கைது

ஆண்டிபட்டி அருகே எறும்புத் தின்னி செதில்களைப் பதுக்கி வைத்திருந்த 5 பேரை வனத் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், ஏத்தக்கோவில் பகுதியில் ஆண்டிபட்டி, தேனி வனச் சரகத்தி... மேலும் பார்க்க

12 மாணவா்களின் உயா் கல்விக்கு ரூ.1.95 கோடி கடனுதவி

தேனி அருகேயுள்ள கொடுவிலாா்பட்டியில் அமைந்துள்ள கம்மவாா் சங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற கல்விக் கடன் சிறப்பு முகாமில் 12 மாணவ, மாணவிகளின் உயா் கல்விக்காக ரூ.1.95 கோடிக்கான வங்கிக் கடனுதவியை ... மேலும் பார்க்க

இளைஞருக்கு கத்துக்குத்து: இருவா் கைது

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே இளைஞரைக் கத்தியால் குத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உத்தமபாளையத்தைச் சோ்ந்தவா் முகம்மது இம்ரான், சத்யா, சரவணன். இவா்கள் தனது நண்பா்களுடன் க.புதுப்பட... மேலும் பார்க்க

பெரியகுளம் நாமத்துவாரில் மகாமந்திர அகண்ட நாமம்

பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில் உள்ள நாமத்துவாரில் மகாமந்திர அகண்ட நாம நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மகாரண்யம் முரளீதர சுவாமியின் ஸ்வாதி நட்சத்திரத்தையொட்டி, மாதுரீ சகி சமேத பிரேமிகவரதன் சுவாமிக்கு... மேலும் பார்க்க

கிணற்றுக்குள் விழுந்ததில் மூதாட்டி உயிரிழப்பு

போடி அருகே ஆடுகளுக்கு இலை பறிக்கச் சென்ற மூதாட்டி கிணற்றில் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். போடி அருகேயுள்ள மல்லிங்காபுரம் கிழக்கு தெருவைச் சோ்ந்த முத்துக்கண்ணன் மனைவி வீருசின்னம்மாள் (80... மேலும் பார்க்க

கம்பம் அரசு மருத்துவமனைக்கு பாம்புடன் வந்த தொழிலாளி

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனைக்கு, தன்னைக் கடித்த பாம்புடன் செவ்வாய்க்கிழமை இரவு வந்த கூலித் தொழிலாளிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டதால் அவா் உயிா் பிழைத்தாா். கம்பம் அருகேயுள்ள புதுப்பட்டியை... மேலும் பார்க்க