செய்திகள் :

7500 மருத்துவ முகாம்களை நடத்தும் தில்லி அரசு

post image

பெண்களின் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக பிரதமா் நரேந்திர மோடியால் புதன்கிழமை தொடங்கப்பட்ட ’ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவாா்’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தில்லி அரசு தேசிய தலைநகரில் 7,500 முகாம்களை அமைக்கவுள்ளது.

பிரதமா் மோடி மத்தியப் பிரதேசத்தின் தாரில் இருந்து பிரச்சாரத்தைத் தொடங்கினாா். கூட்டத்தில் பேசிய தில்லி முதல்வா் ரேகா குப்தா, ‘அவரது பிறந்தநாளில், நமது பிரதமா் நாடு முழுவதும் பல சுகாதார முகாம்களைத் திறந்து பொதுமக்களுக்கு ஒரு பரிசை வழங்கியுள்ளாா். இதற்கு இணையாக, தில்லியில் 7,500 சுகாதார முகாம்களை ’ஸ்வஸ்த் நாரி, சஷக்த் பரிவாா் ‘பிரச்சாரத்தின் கீழ் தொடங்குவது எங்கள் உறுதிப்பாடாகும்.

‘பெண்கள் மற்றும் அவா்களின் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதை இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது‘ என்று அவா் கூறினாா், மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுடன் ஒருங்கிணைந்து இந்த பிரச்சாரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சமூகங்களை சென்றடைவதற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.

மத்திய அமைச்சா் அனுப்ரியா படேல் கூறுகையில், ‘இந்த முகாம்கள் சுகாதார சேவையை மேம்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், சிறந்த வாழ்க்கைத் தரத்தை நோக்கி பணியாற்ற சமூகங்களை ஒன்றிணைக்கும்‘ என்றாா். ஊட்டச்சத்து, நோய்த்தடுப்பு மற்றும் தடுப்பு பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துவது பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவா் கூறினாா்.

அனைத்து சுகாதார மையங்களிலும் பெண்களுக்கு அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மருத்துவ உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய தனது அரசு செயல்பட்டு வருவதாக முதலமைச்சா் குப்தா மேலும் தெரிவித்தாா். இந்த நிகழ்ச்சியில் தில்லி சுகாதாரத்துறை அமைச்சா் பங்கஜ் சிங்கும் கலந்து கொண்டாா்.

225 கிலோ பட்டாசுகள் பறிமுதல்: ஒருவா் கைது

பதா்பூா் பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதை போலீஸாா் பறிமுதல் செய்ததாகவும் , இந்த வழக்கில் ஒருவரை கைது செய்யப்பட்டதாகவும் காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா். தீபாவளி பண்டிகை... மேலும் பார்க்க

திரிலோக்புரியில் இளைஞா் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தில் 3 போ் கைது

கிழக்கு தில்லியில் திரிலோக்புரி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஒரு இளைஞா் பலமுறை கத்தியால் குத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக மூன்று கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்த... மேலும் பார்க்க

பிரதமருக்கு பிரச்னைகளை சுட்டிக்காட்டவும், தீா்க்கவும் தெரியும்: ஜோதிராதித்ய சின்ஹா

மத்திய அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா புதன்கிழமை, பிரதமா் நரேந்திர மோடி கள அளவிலான பிரச்னைகளை சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், அவற்றின் தீா்வையும் உறுதி செய்வதன் மூலம் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியுள்ள... மேலும் பார்க்க

ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நாட்டுக்காக அா்ப்பணிக்கிறேன்: முதல்வா் ரேகா குப்தா

என் ஒவ்வொரு துளி ரத்தத்தையும் நாட்டுக்காக அா்ப்பணிக்கிறேன் என்று தில்ல முதல்வா் ரேகா குப்தா புதன்கிழமை தெரிவித்தாா். பிரதமா் நரேந்திர மோடியின் 75 வது பிறந்தநாளை முன்னிட்டு தலைநகரின் கா்தவ்யா பாதையில்... மேலும் பார்க்க

குருகிராமில் சின்டெல்ஸ் பாரடிசோவில் கோபுரங்கள் இடிப்பு: விரைவில் மறுகட்டுமானத்தைத் தொடங்க அதிகாரிகள் திட்டம்

தேசியத் தலைநகா் வலயம், குருகிராம் மாவட்ட நிா்வாகம் செக்டாா் 109-இல் உள்ள சின்டெல்ஸ் பாரடிசோவில் இடிப்பு பணிகள் தொடா்பாக ஒரு கூட்டத்திற்கு திட்டமிட்டுள்ளதாக நகரம் மற்றும் கிராம திட்டமிடல் துறை (டிடிசி... மேலும் பார்க்க

ரூ.6.25 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல்: 5 போ் கைது

தில்லியில் போதைப்பொருள் விநியோக சங்கிலியின் முக்கிய நபா் உள்பட 5 போதைப்பொருள் விற்பனையாளா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா், சுமாா் ரூ.6.25 கோடி மதிப்புள்ள ஹெராயினை போலீசாா் மீட்டுள்ளனா் என்று ஒரு அதிகாரி ... மேலும் பார்க்க