செய்திகள் :

டிரம்ப், புதின், ஜின்பிங் மூவருக்குமே மோடி நண்பர்! -குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

post image

டொனால்ட் டிரம்ப், விளாதிமீர் புதின், ஜி ஜின்பிங் ஆகிய மூவருக்குமே பிரதமர் நரேந்திர மோடி நண்பர் என்று குடியரசு துணைத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் இன்று(செப். 22) தெரிவித்தார்.

குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றுக்கொண்ட பின், முதல்முறையாக பொது நிகழ்ச்சியில் பேசிய சி. பி. ராதாகிருஷ்ணன், “இந்தியா மீது அமெரிக்காவால் 50 சதவீத வரி விதிக்கப்பட்டிருப்பினும், டிரம்ப் எப்போதும் சொல்வது, ‘மோடி எமது சிறந்த நண்பராவார்’ என்பதே.

இத்தகைய சூழலலிலும் டிரம்ப், ‘மோடிக்கு எதிராக நான் செயல்படுகிறேன்’ என்று சொன்னதேயில்லை. ‘மோடிக்காக நான் இருக்கிறேன்’ என்றே அவர் எப்போதும் குறிப்பிட்டு வருகிறார்.

அதேபோல, ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுக்கும் பிரதமர் மோடி நெருக்கமான நண்பராவார். சர்வதேச அரசியலில் வேற்றுமைகள் இருப்பினும், சீன அதிபர் ஜி ஜின்பிங் மோடியின் நல்ல நண்பராவார். அதனை இப்போது நாம் பார்த்து வருகிறோம்.

இதனாலேயே, செய்ய முடியாதவற்றையும் செய்து காட்டக்கூடியவராக மோடி இருக்கிறார். அவர் மக்களுக்காக பரிசுத்த உள்ளத்துடன் எதையும் செய்து வருகிறார். அவர் பிரதிபலனாக எதையும் எதிர்பார்த்துச் செய்யவில்லை” என்று வெகுவாகப் பாராட்டிப் பேசினார்.

PM Modi makes impossible possible; US President Donald Trump, Russian President Vladimir Putin and Chinese leader Xi Jinping, who have described the PM as their good friend: VP Radhakrishnan

ஆப்பிள் ஐபோன் 17 ப்ரோ, ஐபோன் 17 ஏர் தரமற்றவையா? குவியும் புகார்கள்!

ஆப்பிள் நிறுவனத்தில் புதிதாக ஐபோன் 17 வரிசை ஸ்மார்ட்போன்கள் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டன. இவை பயனாளர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதால், முன்பதிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. க... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் மாநில அந்தஸ்து விவகாரம்: பிரதமர் ஏன் எதுவும் பேசவில்லை? -ஃபரூக் அப்துல்லா

ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படுவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி மக்களுக்காக ஞாயிற்றுக்கிழமை(செப். 21) காணொலி வழியாக ஆற்றிய உரையில் கட்டாயம் பேசியிருக்க வேண... மேலும் பார்க்க

கடினமான வளர்ச்சிப் பணிகளை கைவிடுவது காங்கிரஸின் இயல்பு: பிரதமர் மோடி

கடினமான எந்தவொரு வளர்ச்சிப் பணியையும் கைவிடுவது காங்கிரஸின் "இயல்பான பழக்கம்" என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார். அருணாச்சலப் பிரதேசத்தில் ரூ. 5,100 கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்கள... மேலும் பார்க்க

குஜராத்தில் சரக்கு கப்பலில் பயங்கர தீ விபத்து(விடியோ)

குஜராத்தில் சரக்கு கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. குஜராத் மாநிலம், போர்பந்தர் சுபாஷ்நகர் ஜெட்டியில் நங்கூரமிட்டிருந்த சரக்கு கப்பல் திங்கள்கிழமை திடீரென தீப்பிடித்தது. ஜாம்... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் என்கவுன்டரில் நக்சல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கரின் நாராயண்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த மோதலில் நக்சல் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். மகாராஷ்டிரத்தையொட்டிய அபுஜ்மாத்தில் உள்ள வனப் பகுதியில் நக்சல்கள் நடமாட்டம் குறித்த த... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களிடையே தன்னம்பிக்கையை அதிகரிக்கும்: அமித் ஷா

நாடு முழுவதும் புதிய வரி அமைப்பு நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் பிரதமர் மோடியின் உறுதிப்பாட்டின் சான்றாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இத... மேலும் பார்க்க