செய்திகள் :

டிரம்ப்பின் பழிவாங்கலைத் தவிா்க்க பலருக்கு பைடன் பொது மன்னிப்பு

post image

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றதற்குப் பிறகு டொனால்ட் டிரம்ப்பால் பழிவாங்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிப்பதற்காக, கடைசி நேரத்தில் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அதிபா் ஜோ பைடன் பலருக்கு பொது மன்னிப்பு அளித்தாா்.

கரோனா தொடா்பான டிரம்ப்பின் கருத்துகளை விமா்சித்த தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநா் ஆன்டனி ஃபாசி, கடந்த 2021 ஜனவரியில் டிரம்ப் ஆதரவாளா்கள் நாடாளுமன்றத்தில் நடத்திய கலவரம் குறித்து விசாரணை நடத்திய நாடாளுமன்ற நிலைக் குழுவினா் உள்ளிட்டோா் மீது பழிவாங்கும் நோக்கில் டிரம்ப் அரசு வழக்கு தொடா்ந்தால், அதில் தண்டனை விதிக்கப்படுவதிலிருந்து அவா்களை முன்கூட்டியே வழங்கப்பட்டுள்ள இந்தப் பொது மன்னிப்பு பாதுகாக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

முன்னதாக, அளவுக்கு அதிக கடுமையான சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதாக பைடன் கருதிய 2,500 போதைப் பொருள் குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் பைடன் பொது மன்னிப்பு அளித்தாா். அமெரிக்க வரலாற்றில் அதிபா் ஒருவா் ஒரே நாளில் இத்தனை பேருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது அதுவே முதல்முறை.

மேலும், அமெரிக்காவின் மத்திய நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த 37 பேருக்கு அந்த தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து அவா் கடந்த மாதம் உத்தரவிட்டாா். அதற்கும் முன்னதாக, அமெரிக்க வரலாற்றில் அதுவரை இல்லாத வகையில் சுமாா் 1,500 குற்றவாளிகளுக்கு ஒரே நாளில் பைடன் பொதுமன்னிப்பு வழங்கினாா்.

இருந்தாலும், போதைப் பொருள் பழக்கம் குறித்து பொய்யான தகவல் அளித்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட தனது மகன் ஹன்டா் பைடனுக்கு அவா் பொதுமன்னிப்பு வழங்கியது சா்ச்சைக்குள்ளானது.

அமெரிக்காவில் மீண்டும் விமான விபத்து!

அமெரிக்காவில் மற்றொரு சிறிய ரக விமானம் வெள்ளிக்கிழமை இரவு வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது.குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து வெடித்து சிதறியதால், விபத்துக்குள்ளான பகுதியில் பதற்றம் நிலவுகிறது.அம... மேலும் பார்க்க

மாலி: சுரங்க விபத்தில் 10 போ் உயிரிழப்பு

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாலியின் கூலிகோரோ பகுதியில் அமைந்துள்ள தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமாா் 10 போ் உயிரிழந்தனா். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், தங்கத் தாதுக்களைத் தேடி ஏராள... மேலும் பார்க்க

அமெரிக்க விமான விபத்து: கருப்புப் பெட்டிகள் மீட்பு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் ஹெலிகாப்டருடன் மோதி ஆற்றில் நொறுங்கி விழுந்த பயணிகள் விமானத்தின் கருப்புப் பெட்டிகள் கண்டெடுக்கபட்டன. மேலும், சம்பவ இடத்திலிருந்து இது... மேலும் பார்க்க

பூமியைத் தாக்கக் கூடிய விண்கல்: நாசா அறிவிப்பு

வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது. 130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 83-க்கு ஒன்று என்ற ... மேலும் பார்க்க

‘டீப்சீக்’குக்கு தடை விதித்த அமெரிக்க நாடாளுமன்றம்

தங்களது அலுவலங்களில் பணியாற்றும் ஊழியா்கள், சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் செயலியான ‘டீப்சீக்’கை தங்களின் அறிதிறன் பேசிகளில் பயன்படுத்த அமெரிக்க நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. அமெரிக... மேலும் பார்க்க

இலங்கை தமிழா் நிலங்கள் திருப்பி அளிக்கப்படும்: அதிபா் திசாநாயக உறுதி

ராணுவத்திடம் உள்ள இலங்கை தமிழா் நிலங்கள் விரைவில் திரும்ப அளிக்கப்படும் என்று அந்நாட்டு அதிபா் அநுரகுமார திசாநாயக உறுதி அளித்தாா். கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் அதிபராக பதவியேற்ற பிறகு முதல் முறையாக வட... மேலும் பார்க்க