பூமியைத் தாக்கக் கூடிய விண்கல்: நாசா அறிவிப்பு
வரும் 2032-ஆம் ஆண்டில் ஒய்ஆா்4 என்ற விண்கல் பூமியைத் தாக்குவதற்கான வாய்ப்புள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
130 முதல் 300 அடிவரை குறுக்களவு கொண்ட அந்த விண்கல் பூமியைத் தாக்கும் வாய்ப்பு 83-க்கு ஒன்று என்ற விகிதத்தில் உள்ளது. அந்த விண்கல் தாக்குவதால் பூமியில் மனித குலம் அழிந்துவிடாது. இருந்தாலும், அது ஏதாவது ஒரு முக்கிய நகரில் விழுந்தால் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக்கூடும். அது பூமியில் மோதும்போது ஏற்படும் சக்தி 8 மெகாடன் டிஎன்டி அளவுக்கு (ஹிரோஷிமாவைத் தாக்கிய அணுகுண்டைப் போல் 500 மடங்கு) இருக்கும் என்று கூறப்படுகிறது.