செய்திகள் :

டென்னிஸ் வீராங்கனையை சுட்டுக் கொன்ற தந்தை!

post image

ஹரியாணாவில் மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையை தந்தையே சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா மாநிலம் குருகிராமைச் சேர்ந்தவர் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ். இவர் மாநில அளவிலான போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் குடும்பத்தினருடன் குருகிராமில் உள்ள செக்டார் 57- பகுதியில் வசித்துவந்தார்.

25 வயதான ராதிகா யாதவ், இஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். இது தொடர்பாக ராதிகாவுக்கும் அவரது தந்தைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் இடையிலான வாக்கு வாதம் மோதலாக முற்றிய நிலையில், ராதிகா யாதவின் தந்தை தனது கைத்துப்பாக்கியை எடுத்து ராதிகாவை சரமாரியாக மூன்று முறை சுட்டுள்ளார்.

பலத்த காயமடைந்த ராதிகாவை மீட்ட அவரது உறவினர்கள், ஆபத்தான நிலையில் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட தந்தையை போலீசார் கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கைத்துப்பாக்கி மீட்கப்பட்டது. குற்றத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ராதிகா யாதவ் மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களையும் வென்றிருந்தார். மேலும் ஒரு டென்னிஸ் அகாடமியை நடத்தி வந்தார். இரட்டையர் டென்னிஸ் வீராங்கனையாக ராதிகாவின் சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு தரவரிசையில் 113 ஆவது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

State-level tennis player Radhika Yadav shot dead by father in Gurugram

இதையும் படிக்க :தெரு நாய்களுக்கு ரூ.2.88 கோடியில் சிக்கன், முட்டை சாதம் வழங்கும் திட்டம்! எங்கு தெரியுமா?

முதல் டி20: இலங்கை வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் சோ்க்க, இலங்கை 19 ஓவா்களில்... மேலும் பார்க்க

ஸ்வியாடெக் - அனிசிமோவா பலப்பரீட்சை: முதல் விம்பிள்டன் கோப்பைக்காக மோதுகின்றனா்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் ... மேலும் பார்க்க

ஸ்மித், காா்ஸ் நிதானம்; முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து ஸ்திரம்

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.அதன் பேட்டா்களில் ஜோ ரூட் சதமடிக்க, லோயா் ஆா்டரில் வந்த ஜேமி ஸ்மித், பிரைடன் காா்ஸ் நிதானமான ஆட்டத்தை வ... மேலும் பார்க்க

பாதுகாப்பு சூழலை ஆராய்கிறது பாக்.

இந்தியாவில் தங்கள் அணியினருக்கான பாதுகாப்பு சூழலை ஆராய்ந்த பிறகே, அங்கு நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளுக்கு தங்கள் அணியை அனுப்ப இயலும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: தமிழகம், போபால், ஐஓசி வெற்றி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் லீக் சுற்றில் ஹாக்கி தமிழ்நாடு, சாய் என்சிஓஇ போபால், ஐஓசி அணிகள் வெற்றி பெற்றன. சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வெள்ளிக... மேலும் பார்க்க