செய்திகள் :

ட்ரம்ப் ஹோட்டல் வாடகை திட்டத்தில் முதலீடு; 5 லட்சம் இழந்த வழக்கறிஞர் - எப்படி நடந்தது சைபர் மோசடி?

post image

"டொனால்ட் ட்ரம்ப் ஹோட்டல் வாடகை" நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிகமான வருமானம் கிடைக்கும் என்று யூடியூப்பில் வீடியோ பார்த்து சைபர் வலையில் கர்நாடகாவைச் சேர்ந்த வழக்கறிஞர் சிக்கிய சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

கிட்டத்தட்ட ஆறு லட்சம் ரூபாய் வரை இதில் முதலீடு செய்ததும் தெரியவந்துள்ளது. எப்படி நடந்தது இந்த சைபர் மோசடி?

அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிக வருமானம் தருவதாக உறுதியளிப்பதாக, AI உருவாக்கிய வீடியோவை பயன்படுத்தி, ”ட்ரம்ப் ஹோட்டல் வாடகை” திட்டத்தில் முதலீடு செய்யுமாறு வழக்கறிஞர் ஒருவரை சைபர் குற்றவாளிகள் ஏமாற்றியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதாவது ட்ரம்ப் ஹோட்டல் வாடகை நிறுவனத்தில் முதலீடு வாய்ப்பை வழங்கும் ஒரு வீடியோவை யூடியூப்பில் வழக்கறிஞர் பார்த்துள்ளார்.

cyber crime

இதன்படி அதில் வந்த லிங்கை கிளிக் செய்து மொபைலில் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார். அதில் அறிவுறுத்தப்பட்டதன்படி அவர் அதில் உள்ள படிவத்தை நிரப்பியுள்ளார். தனது வங்கி கணக்கு விவரங்கள் உட்பட அனைத்தையும் அதில் சமர்ப்பித்துள்ளார்.

மேலும் இந்த கணக்கை செயல்படுத்த 1,500 ரூபாய் தனது பணத்தை செலுத்தி உள்ளார். அவரது முதலீட்டில் தினசரி மூன்று சதவீதம் வருமானம் வரும் என்று அவருக்கு குறிப்பிடப்பட்டுள்ளது ஆரம்பத்தில் தனது முதலீடுகளில் வருமானம் பெற்று வந்த அவர் பின்னர் வருமானம் பெறுவது நிறுத்தப்பட்டுள்ளது.

ஜனவரி 25 முதல் ஏப்ரல் நான்கு வரை பல்வேறு வங்கி கணக்கு யுபிஐடிகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனை மூலம் கிட்டத்தட்ட 5 லட்சத்து 93,240 ரூபாய் டெபாசிட் செய்துள்ளார். இந்த பணம் அனைத்தும் இரட்டிப்பாகும் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்ததாக வழக்கறிஞர் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டதை அடுத்து தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவு 318(4) (மோசடி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் போது, ​​புகார்தாரர் 'போலி' இணைப்பு மூலம் ஏமாற்றப்பட்டது கண்டறியப்பட்டது. பணம் மாற்றப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1.5 லட்சம் முடக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும் காவல்துறை சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

பல் சிகிச்சை எடுத்துகொண்ட 8 பேர் மரணம்... சர்ச்சையில் வாணியம்பாடி கிளினிக் - நடந்தது என்ன?

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி பி.ஜே.என்.நேரு சாலையில், `வி.டி.எஸ் - அறிவு பல் மருத்துவமனை’ என்கிற பெயரில், தனியார் கிளினிக் செயல்பட்டுவந்தது. இங்கு வாணியம்பாடி நியூடவுன் பகுதியைச் சேர்ந்த இந்திர... மேலும் பார்க்க

20 ஆண்டுகளில் பாலியல் கொடுமைக்கு இரையான 299 பேர்... பிரான்ஸை அதிரவைத்த ஓய்வுபெற்ற மருத்துவர்!

கடந்த 20 வருடங்களில் சிறுமிகள், பெண்கள் என 299 பேரை பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம் செய்த வழக்கில் ஓய்வுபெற்ற மருத்துவருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக ராய... மேலும் பார்க்க

மண்ணில் புதைக்கப்பட்ட ஏலக்காய் மூடைகள்; இலங்கைக்கு கடத்த முயன்ற தந்தை - மகனுக்கு போலீஸ் வலை!

கடந்த சில ஆண்டுகளாக தமிழக கடலோர பகுதிகளில் இருந்து போதைப்பொருள்கள், கஞ்சா, கடல் அட்டை போன்றவை இலங்கைக்கு கள்ளத்தனமாக கடத்தப்பட்டு வருகின்றன. இவற்றுடன் தற்போது சமையலுக்குப் பயன்படுத்தும் விராலி மஞ்சள்,... மேலும் பார்க்க

தூத்துக்குடி: நிலத்தைக் கேட்டு பெண்ணிற்குக் கொலை மிரட்டல்; திமுக எம்எல்ஏ-வின் சகோதரர் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏ., சண்முகையா. இவரது உடன்பிறந்த சகோதரர் அயிரவன்பட்டி முருகேசன்.தொழிலதிபரான இவர் முன்னாள் அ.தி.மு.க பிரமுகர். முருகேசன் ஓட்டப்... மேலும் பார்க்க

`தொழிலதிபரிடம் லஞ்சம்' - அமலாக்கத்துறை அதிகாரியை கைது செய்த சிபிஐ; சிக்கியது எப்படி?

ஒடிசா மாநிலத்தின் புவனேஸ்வர் அமலாக்கத் துறையின் இணை இயக்குநர் சிந்தன் ரகுவம்சி. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் லஞ்சம் வாங்க முயன்றபோது சிபிஐ-யால் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக வெளியான செய்தியில், சுரங்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பெண்ணை நிர்வாணமாக்கி தாக்கிய போலீஸ் - தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு பறந்த புகார்

புதுச்சேரி புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் அமைந்திருக்கிறது `லே பாண்டி’ (Le Pondy) நட்சத்திர விடுதி. சில தினங்களுக்கு முன்பு இங்கு தங்கிச் சென்ற கேரளாவைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்களுடைய அறையில் வைத்திரு... மேலும் பார்க்க