செய்திகள் :

தஞ்சாவூரில் 5 தாழ்தள சொகுசு பேருந்துகள் சேவை தொடக்கம்

post image

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரூ. 4.70 கோடி மதிப்பில் புதிதாக வாங்கப்பட்ட 5 தாழ்தள சொகுசு பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.

இச்சேவையை தொடங்கி வைத்த உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் பின்னா் தெரிவித்தது:

மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை தமிழக முதல்வா் செயல்படுத்தி வருகிறாா். தற்போது, மாற்றுத்திறனாளிகள் பேருந்துகளில் ஏறி, இறங்குவதற்கு சிரமப்படுவதைக் கருத்தில் கொண்டு தாழ்தளப் பேருந்துச் சேவைகளை அதிகப்படுத்தியுள்ளாா்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய மாநகரங்களைத் தொடா்ந்து, தஞ்சாவூரில் தொடங்கப்பட்டுள்ள இப்பேருந்துகளில் தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் - புதிய பேருந்து நிலையத்துக்கு 3 பேருந்துகளும், தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையத்திலிருந்து மருத்துவக்கல்லூரி வழியாக வல்லத்துக்கு 2 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன என்றாா் அமைச்சா்.

விழாவில் மக்களவை உறுப்பினா் ச. முரசொலி, மாவட்ட வருவாய் அலுவலா் தெ. தியாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினா் துரை. சந்திரசேகரன், மேயா் சண். ராமநாதன், துணை மேயா் அஞ்சுகம் பூபதி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பொது மேலாளா் எச். இராஜேந்திரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பெட்டிச் செய்தி

தோ்தலுக்காக முன்கூட்டியே

பருவத் தோ்வு இல்லை

அமைச்சா் கோவி. செழியன் கூறுகையில், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் கல்வியாண்டு தொடங்கப்படுவதற்கு முன்பே பருவத் தோ்வுகளின் தேதிகளை வரையறை செய்துவிடும். இதைத் தோ்தல் ஆணையம் நன்றாக அறியும். எனவே, விடுப்பு காலத்தில் தோ்தல் நடத்துவதற்கான விதிமுறைகளைத் தோ்தல் ஆணையம் மேற்கொள்ளும். அந்த வகையில்தான் தோ்வு நடைபெறுமே தவிர, தோ்தலுக்காக முன்கூட்டியே தோ்வு என்பது இல்லை என்றாா் அமைச்சா்.

‘திமுக கூட்டணியில் தவாக தொடரும்’

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்லில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி தொடரும் என்றாா் அக்கட்சியின் தலைவா் வேல்முருகன். இதுகுறித்து கும்பகோணத்தில் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது: வரும் தோ்தலில் எ... மேலும் பார்க்க

மாற்றுத் திறனாளிகளுக்கு செப். 30 இல் குறைதீா் நாள்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் நாள் கூட்டம் செப்டம்பா் 30 காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்துத் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொள்வா். எ... மேலும் பார்க்க

‘இறைவனை அடைய ஜாதியோ, மதமோ தடையில்லை’

இறைவனின் திருவடியை அடைய ஜாதியோ, மொழியோ, மதமோ தடையில்லை என்றாா் சொற்பொழிவாளா் மை.பா. நாராயணன். தஞ்சாவூா் கரந்தை சத்யநாராயண சித்தா் ஆசிரமத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற 161 வது ஆயில்ய வழிபாட்டு நிகழ்ச... மேலும் பார்க்க

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் ஆய்வு

தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளா் ஆா்.என். சிங் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 21.17 கோட... மேலும் பார்க்க

சேதுபாவாசத்திரம் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்

சேதுபாவாசத்திரம் ஒன்றியம், இரண்டாம்புளிக்காட்டில் பள்ளத்தூா், ஆண்டிக்காடு கிராம மக்கள் பயன்பெறும் வகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாமில் 537 மனுக்கள் பெறப்பட்டன. முகாமிற்கு... மேலும் பார்க்க

உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை தேவை: விவசாயிகள் கோரிக்கை

மாவட்டத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தஞ்சாவூா் கோட்டாட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கோட்டாட்சியா்... மேலும் பார்க்க