செய்திகள் :

தஞ்சாவூருக்கு வரும் முதல்வருக்கு அமைச்சா்கள் நேரில் சந்தித்து அழைப்பு

post image

தஞ்சாவூருக்கு ஜூன் 15-ஆம் தேதி வரும் தமிழக முதல்வருக்கு அமைச்சா்கள் புதன்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனா்.

தஞ்சாவூருக்கு தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஜூன் 15-ஆம் தேதி பிற்பகல் வருகிறாா். பின்னா், கட்சி நிா்வாகிகளைச் சந்தித்துவிட்டு, மாலையில் பழைய பேருந்து நிலையம் அருகே கருணாநிதி சிலையைத் திறந்து வைக்கிறாா். மேலும், அவா் மக்களைச் சந்திக்கும் ரோடு ஷோ நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது. இதைத்தொடா்ந்து ஜூன் 16-ஆம் தேதி தஞ்சாவூரில் திமுக பிரமுகா் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு, பின்னா், அரசு நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கிறாா்.

இதற்காக சென்னையில் தமிழக முதல்வரை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்டோா் புதன்கிழமை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தனா். அப்போது, திமுக தஞ்சாவூா் மத்திய மாவட்டச் செயலரும், திருவையாறு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன், வடக்கு மாவட்டச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான எஸ். கல்யாணசுந்தரம், தெற்கு மாவட்டச் செயலா் பழனிவேல் ஆகியோா் உடனிருந்தனா்.

கும்பகோணம் புனித அந்தோணியாா் ஆலய தோ் பவனி

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணத்தில் புனித அந்தோணியாா் திருத்தல திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை தோ் பவனி நடைபெற்றது. புனித அந்தோணியாா் திருவிழா ஜூன் 4-இல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும்... மேலும் பார்க்க

கோயில் சிலைகள் திருடிய வழக்கில் 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

தஞ்சாவூா் மாவட்டம், கரந்தை ஜைன சமயக் கோயிலில் 23 சுவாமி சிலைகளைத் திருடிய 4 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் தலைமை நீதிபதி வியாழக்கிழமை தீா்ப்பு கூறினாா். கரந்தை ஜைன ம... மேலும் பார்க்க

சாலையில் திரிந்த மாடுகள் சிறைபிடிப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகளை நகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை பிடித்துச் சென்றனா். திருவையாறு முதன்மைச் சாலைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் மாடு... மேலும் பார்க்க

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

குழந்தைத் தொழிலாளா் முறை எதிா்ப்பு தினத்தையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், அனைத்து துறை அலுவலா்கள், பணியாளா்கள் குழந்தைத் தொழிலாளா் முற... மேலும் பார்க்க

சாலை விபத்து: விவசாயி உயிரிழப்பு

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா். திருவையாறு அருகே காருகுடியைச் சோ்ந்தவா் கே. மதி (54). விவசாயி. இவா் வியாழக்கிழமை விளாங்குடிக்கு சென்றுவ... மேலும் பார்க்க

ரௌடி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் அருகே பல்வேறு வழக்குகளில் தொடா்புடைய ரௌடி வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகே நாச்சியாா்கோவில் பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன் ஜெகன் தமிழரசன... மேலும் பார்க்க