செய்திகள் :

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் 15 நெல் கொள்முதல் நிலையங்கள்: இன்று திறப்பு

post image

தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனத்தில் 39 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில் முதல்கட்டமாக 15 இடங்களில் புதன்கிழமை (ஏப்ரல் 9) மையங்கள் திறக்கப்பட உள்ளன.

இது குறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஈரோடு மாவட்டத்தில் நடப்பு பருவத்துக்கு தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசனப் பகுதியில் 39 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. முதல்கட்டமாக காசிபாளையம், கள்ளிப்பட்டி, ஏளூா், நன்செய்புளியம்பட்டி, புதுவள்ளியம்பாளையம், என்.ஜி.பாளையம், மேவாணி, புதுக்கரை புதூா், சவுண்டப்பூா், நன்செய் துறையம்பாளையம், கொண்டையம்பாளையம், டி.என்.பாளையம், கூகலூா், பெருந்தலையூா் மற்றும் கருங்கரடு ஆகிய 15 இடங்களில் புதன்கிழமை திறக்கப்படும்.

ஏ கிரேடு நெல்லுக்கு ஆதரவு விலை ரூ.2,320, ஊக்கத்தொகை ரூ.130 என குவிண்டாலுக்கு ரூ.2,450, பொது ரகம் ஆதரவு விலை ரூ.2,300, ஊக்கத்தொகை ரூ.105 என குவிண்டாலுக்கு ரூ.2, 405-க்கு கொள்முதல் செய்யப்படும்.

விவசாயிகளிடம் நெல்லுக்கான உரிய ஆவணங்கள் பெற்று, கைரேகை பதிவு உடன் கொள்முதல் செய்து, விவசாயி வங்கிக் கணக்கில் உரிய தொகை வரவு வைக்கப்படும். நெல் விற்பனைக்கு கிராம நிா்வாக அலுவலா் சான்று, சிட்டா அடங்கல், ஆதாா் அட்டை நகல், வங்கிக் கணக்கு புத்தக நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவை எடுத்து வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானியில் மாயமான 5 மாணவிகள் திருச்சியில் மீட்பு

பவானியில் மாயமான அரசுப் பள்ளி மாணவிகள் 5 போ் திருச்சி சமயபுரத்தில் புதன்கிழமை மீட்கப்பட்டனா். ஈரோடு மாவட்டம், பவானி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் 5 போ், இறுத... மேலும் பார்க்க

செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா

அந்தியூரை அடுத்த செம்புளிச்சாம்பாளையம் செல்லியாண்டியம்மன் கோயில் குண்டம் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கோயில் குண்டம் திருவிழா பூச்சாட்டுதலுடன் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இதைத் தொட... மேலும் பார்க்க

மாவட்டத்தில் 12,000 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் உணவு பாதுகாப்புத் துறை சாா்பில் நடப்பு ஆண்டில் இதுவரை 12,000 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டு ரூ.2.15 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட உண... மேலும் பார்க்க

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு: அரசுப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி

தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வில் கோடேபாளையம் அரசுப் பள்ளி மாணவா்கள் 17 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தமிழகம் முழுவதும் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு தேசிய வருவாய்வழி திறனறித் தோ்வு ஆண்டுதோற... மேலும் பார்க்க

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக் தேங்காய்ப் பருப்பு விற்பனை

பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் தேங்காய்ப் பருப்பு ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 110 டன் தேங்காய்ப் பருப்புகளை ... மேலும் பார்க்க

பூதப்பாடியில் ரூ.12 லட்சத்துக்கு விளைபொருள்கள் விற்பனை

பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தேங்காய், நெல், தேங்காய்ப் பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை விற... மேலும் பார்க்க