செய்திகள் :

தடையை மீறி போராட்ட வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் தலைவா்கள் விடுவிப்பு

post image

தில்லியில் இந்திய தோ்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே தடையை மீறி போராட்டம் நடத்திய வழக்கில் இருந்து எம்.பி. டெரிக் ஓ.பிரெயின், சகாரிகா கோஸ், சாக்கெட் கோகலே உள்பட திரிணமூல் காங்கிரஸ் மூத்த தலைவா்கள் 10 பேரை விடுவித்து தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.

மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில், சிபிஐ, தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ), அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள் எதிா்க்கட்சிகளுக்கு நெருக்கடி அளிப்பதாக குற்றஞ்சாட்டி இந்தப் போராட்டத்தில் கடந்த ஆண்டு ஏப்ரல் 8-ஆம் தேதிஅவா்கள் ஈடுபட்டனா்.

தோ்தல் ஆணைய அலுவலகத்தின் பிரதான வாயில் பகுதியில் குற்றவியல் நடைமுறை சட்டப் பிரிவு 144-இன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தடையை மீறியும், உரிய அனுமதியைப் பெறாமலும் இவா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தில்லி போலீஸாா் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆா்) பதிவு செய்தனா்.

இந்த வழக்கு தில்லி கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. முன்னதாக, குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேருக்கும் கடந்த மே 13-ஆம் தேதி நீதிமன்றம் வழக்கில் ஜாமீன் வழங்கியது.

இந்த வழக்கு கூடுதல் தலைமை நீதித்துறை மாஜிஸ்திரேட் நேஹா மிட்டல் முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றஞ்சாட்டப்பட்ட 10 பேரையும் வழக்கிலிருந்து விடுவித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா்.

வேலைவாய்ப்பு உருவாக்குவதில் கவனம் செலுத்தும் பாஜக அரசு: பிரதமர்!

பொது மற்றும் தனியார் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தனது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். தில்லியில் 51 ஆயிரம் இளைஞக்ளுக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணி நிய... மேலும் பார்க்க

ஒட்டுமொத்த அலட்சியம்! ஆர்சிபி கூட்டநெரிசல் குறித்த அறிக்கை தாக்கல்!!

பெங்களூரில், ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஒட்டுமொத்த அலட்சியமே காரணம் என விசாரணை அறிக்கையில் தகவல்.ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கோப... மேலும் பார்க்க

ரூ.1.18 கோடி வெகுமதி: சத்தீஸ்கரில் 23 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் 23 நக்சல்கள் இன்று (ஜூலை 12) சரணடைந்துள்ளதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார் சரணடைந்த நக்சலைட்டுகளில் 11 மூத்த நக்சல்கள் ஆவார். அவர்களில் பெரும்ப... மேலும் பார்க்க

சாலைகளில் ஓடும் படகுகள்.. மத்திய பிரதேசத்தில் கரையைக் கடந்த மந்தாகினி ஆறு

போபால்: மத்திய பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக, மந்தாகினி ஆறு கரையை கடந்து பாய்ந்ததால், பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து சாலைகளில் படகுகள் நீந்திச் செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளன.ராம்கட், ஜான்... மேலும் பார்க்க

தில்லியில் 4 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்தது: 8 பேர் காயம்!

வடகிழக்கு தில்லியின் வெல்கம் பகுதியில் நான்கு மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் ஒரு வயதுக் குழந்தை உள்பட 8 பேர் காயமடைந்தனர். சம்பவ நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் பார்க்க

ஏர் இந்தியா விமான விபத்து: மேடே அழைப்புக்கு முன் நடந்தது என்ன? இறுதி வினாடிகள்

புது தில்லி: அகமதாபாத் ஏா் இந்தியா விமான விபத்து தொடா்பாக விசாரித்து வரும் விமான விபத்து புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) அதன் முதல்கட்ட அறிக்கையை தாக்கல் செய்திருக்கிறது.கடந்த ஜூன் 12ஆம் தேதி, குஜராத் மாநில... மேலும் பார்க்க