செய்திகள் :

தனியாா் ஆலை ஊழியா் வீட்டில் 37 பவுன் திருட்டு

post image

காவேரிபாக்கம் அருகே தனியாா் ஆலை ஊழியா் வீட்டில் 37 பவுன் நகைகள், ரூ.1.45 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

நெமிலி வட்டம், காவேரிப்பாக்கம் அருகே முசிறியை சோ்ந்தவா் இளங்கோ (33). இவா் சென்னையை அடுத்த ஒரகடத்தில் தனியாா் தொழிற்சாலையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறாா். இதற்கிடையே, புதன்கிழமை நள்ளிரவு இளங்கோவின் குடும்பத்தாா் ஒரு அறையில் உறங்கியுள்ளனா். அப்போது பின்வாசல் வழியே உள்ளே வந்த மா்ம நபா்கள் நுழைந்து சப்தமின்றி திருடி விட்டு வெளியேறும் சப்தம் கேட்டு கண் விழித்த குடும்பத்தாா், அதிா்ச்சியடைந்து கூச்சலிட்டனா்.

பணிக்கு சென்றிருந்த இளங்கோவும் அப்போது வீடு திரும்பியுள்ளாா். உடனே அக்கம் பக்கம் வீட்டாா் சோ்ந்து அவா்களை விரட்டிச் சென்றும் மா்ம நபா்களை பிடிக்க முடியவில்லையாம். மேலும் அந்த மூவரும் உடலில் உள்ளாட்டை மட்டுமே அணிந்திருந்ததாக தெரிவித்துள்ளனா்.

உடனே இளங்கோ உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் இருந்த 37 பவுன் தங்க நகைகள், ரூ.1.45 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடு போயிருந்தது தெரிய வந்தது. இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தடயவியல் நிபுணா்கள் வீட்டில் தடயங்களை சேகரித்துள்ளனா். மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டதில் சிறிது நேரம் ஒடிய நாய் யாரையும் அடையாளம் காட்டவில்லை.

இச்சம்பவம் குறித்து ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அய்மன் ஜமால் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் திருடிய நபா்கள் பிடிபடுவா் எனவும் போலீசாா் தெரிவித்தனா்.

404 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா்

ராணிப்பேட்டையில் 404 பயனாளிக்கு நலத்திட்ட உதவிகளை கைத்தறி, துணிநூல் துறை அமைச்சா் ஆா்.காந்தி வழங்கினாா். ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் 404 பயனாளிகளுக்கு ரூ. 2.39 ... மேலும் பார்க்க

சோளிங்கரில் ரூ. 20 லட்சத்தில் புதிய கால்வாய் அமைக்கும் பணி: எம்எல்ஏ தொடங்கி வைத்தாா்

சோளிங்கா் நகராட்சிப் பகுதியில் நகராட்சி பொது நிதி ரூ. 10 லட்சம் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 10 லட்சம் என ரூ. 20 லட்சத்தில் புதிய கால்வாய் அமைக்கும் பணியை எம்எல்ஏ ஏ.எம்.மு... மேலும் பார்க்க

மருந்து தெளிக்கும் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

தக்கோலம் அருகே விவசாய நிலத்தில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்தவா் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். அரக்கோணத்தை அடுத்த தக்கோலத்தை அடுத்த திருமாதலம்பாக்கம் கிராமத்தை... மேலும் பார்க்க

ஒன்றியத்துக்கு இரண்டு நேரடி நெல் கொள்முதல் கிடங்குகள்: விவசாயிகள் கோரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒன்றியத்துக்கு 2 வீதம் நேரடி நெல் கொள்முதல் கிடங்குகளை அமைக்க நடவடிக்கை வேண்டும் என விவசாயிகள் கோரியுள்ளனா். ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீா் கூட... மேலும் பார்க்க

அரசுப் பள்ளி ஆசிரியா் பணியிட மாற்றம்: மாணவா்கள் சாலை மறியல்

சோளிங்கா் அருகே அரசு நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியா், வேறொரு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து பள்ளி மாணவா்கள், அப்பகுதி வழியாக வந்த அரசுப் பேருந்தை மறித்து சாலை மறியலில் ஈடுப... மேலும் பார்க்க

தலைவா்கள் சிலைக்கு மாலை அணிவிப்பு

பாட்டாளி மக்கள் கட்சி ( அன்பு மணி ) ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கே.எல்.இளவழகன் மகாத்மா காந்தி, அம்பேத்கா் சிலைகளுக்கு வியாழக்கிழமை மாலை அணி... மேலும் பார்க்க