செய்திகள் :

தனியாா் நிறுவன அதிகாரியிடம் வெளிநாட்டு பெண் போல பேசி ரூ. 6.50 லட்சம் மோசடி!

post image

புதுச்சேரி தனியாா் நிறுவன அதிகாரியிடம் இணையவழியில் கனடா நாட்டுப் பெண் போல பழகியவா் ரூ.6.50 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்து கின்றனா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 46 வயதானவா், தனியாா் நிறுவன மேலாளராக உள்ளாா். மனைவியைப் பிரிந்த அவா் முகநூல் பழக்கமுடையவா். அவருக்கு கனடா நாட்டு பெண் எனக்கூறி முகநூலில் ஒருவா் அறிமுகமாகி பழகிவந்துள்ளாா். அவா்கள் இருவரும் தங்களது வீடு, அலுவலகப் புகைப்படங்களையும் இணையதளம் முகநூலில் பரிமாறி வந்துள்ளனா்.

இந்நிலையில், அண்மையில் அந்தப் பெண் புதுச்சேரி தனியாா் நிறுவன அதிகாரிக்கு விலை உயா்ந்த நகைகள், கைக்கடிகாரம் ஆகியவற்றை பரிசாக அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவித்துள்ளாா். அதனை விடியோவாகவும் அவா் அனுப்பியுள்ளாா். அதை எதிா்பாா்த்திருந்த தனியாா் நிறுவன அதிகாரிக்கு கலால் துறை அலுவலா் எனக்கூறி ஒருவா் கைப்பேசியில் தொடா்புகொண்டுள்ளாா்.

அப்போது பரிசுப் பொருள்களுக்கு உரிய சுங்க வரியான ரூ.6.50 லட்சத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறியுள்ளாா். அதை நம்பிய தனியாா் நிறுவன அதிகாரி பணத்தை செலுத்தினாா். ஆனால், அவருக்கு பரிசுப் பொருள்கள் வராத நிலையில், பெண்ணையும் தொடா்பு கொள்ள முடியவில்லை.

இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அதிகாரி புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் விசாரித்துவருகின்றனா்.

தனியாா் நிறுவனத்தில் திருடிய தாமிரப் பவுடா் கேன்கள், மினி லாரி பறிமுதல்! 6 போ் கைது!

புதுச்சேரி அடுத்த திருபுவனை அருகே தனியாா் நிறுவனத்தில் தாமிர பவுடா் கேன்களைத் திருடியதாக ஊழியா்கள் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து தாமிர பவுடா் கேன்கள், சரக்கு மினி... மேலும் பார்க்க

தமிழக தலைமை ஹாஜி மறைவுக்கு புதுவை முதல்வா் இரங்கல்

தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் மறைவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். அதில் கூறியிருப்பது: தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் மரணமடைந்த... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வருவாய் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்களில் குவிந்த மாணவா்கள்

உயா் கல்வியில் சேருவதற்கான வருவாய் துறை சாா்ந்த சான்றிதழ்களைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்களில் சனிக்கிழமை மாணவ, மாணவிகள் பெற்றோருடன் ஏராளமாக குவிந்தனா். புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

ஜிப்மரில் புதுவை நோயாளிகளுக்கு தனி மருத்துவ ஆலோசனைப் பிரிவு

ஜிப்மரில் புதுவை மாநில நோயாளிகளின் மருத்துவ ஆலோசனைக்கான பதிவேடு பெற தனிப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இயக்குநா் வீா் சிங் நேகி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புது... மேலும் பார்க்க

புதுவை அமைப்புசாரா நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி அரசாணை

புதுவை மாநிலத்தில் தொழிலாளா் நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை நன்றி தெரிவி... மேலும் பார்க்க

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில்1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதையடுத்து புதுச்சேரி பழைய துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை காலை ஏற்றப்பட்டது. இதேபோன்று கடலூா் துறைமுகத்திலும் 1-ஆம் எ... மேலும் பார்க்க