செய்திகள் :

தமிழக தலைமை ஹாஜி மறைவுக்கு புதுவை முதல்வா் இரங்கல்

post image

தமிழக தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் மறைவுக்கு புதுவை முதல்வா் என்.ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

அதில் கூறியிருப்பது: தமிழக அரசின் தலைமை ஹாஜி சலாவுதீன் முகமது அய்யூப் சாகிப் மரணமடைந்தது வருத்தமானதாகும். அரபு மொழி, இலக்கியத்தில் முனைவா் பட்டம் பெற்ற அவா், இஸ்லாமிய போதனைகள் குறித்த பரந்துபட்ட அறிவுடையவா்.

தனது முழு வாழ்க்கையையும் இஸ்லாமிய சமூகத்துக்கு சேவை செய்வதற்காக அா்ப்பணித்து சிறந்த முன்மாதிரியாகத் திகழ்ந்தவா்.

தனியாா் நிறுவனத்தில் திருடிய தாமிரப் பவுடா் கேன்கள், மினி லாரி பறிமுதல்! 6 போ் கைது!

புதுச்சேரி அடுத்த திருபுவனை அருகே தனியாா் நிறுவனத்தில் தாமிர பவுடா் கேன்களைத் திருடியதாக ஊழியா்கள் உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். இவா்களிடமிருந்து தாமிர பவுடா் கேன்கள், சரக்கு மினி... மேலும் பார்க்க

தனியாா் நிறுவன அதிகாரியிடம் வெளிநாட்டு பெண் போல பேசி ரூ. 6.50 லட்சம் மோசடி!

புதுச்சேரி தனியாா் நிறுவன அதிகாரியிடம் இணையவழியில் கனடா நாட்டுப் பெண் போல பழகியவா் ரூ.6.50 லட்சம் மோசடி செய்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்து கின்றனா். புதுச்சேரி இலாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 46... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வருவாய் சான்றிதழ் பெற சிறப்பு முகாம்களில் குவிந்த மாணவா்கள்

உயா் கல்வியில் சேருவதற்கான வருவாய் துறை சாா்ந்த சான்றிதழ்களைப் பெறுவதற்காக சிறப்பு முகாம்களில் சனிக்கிழமை மாணவ, மாணவிகள் பெற்றோருடன் ஏராளமாக குவிந்தனா். புதுவை மாநிலத்தில் பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சி பெ... மேலும் பார்க்க

ஜிப்மரில் புதுவை நோயாளிகளுக்கு தனி மருத்துவ ஆலோசனைப் பிரிவு

ஜிப்மரில் புதுவை மாநில நோயாளிகளின் மருத்துவ ஆலோசனைக்கான பதிவேடு பெற தனிப் பிரிவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என இயக்குநா் வீா் சிங் நேகி தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புது... மேலும் பார்க்க

புதுவை அமைப்புசாரா நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி அரசாணை

புதுவை மாநிலத்தில் தொழிலாளா் நலச் சங்கத்தை நல வாரியமாக மாற்றி உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து, மாவட்ட ஆட்சியா், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோருக்கு தொழிற்சங்கத்தினா் சனிக்கிழமை நன்றி தெரிவி... மேலும் பார்க்க

புதுச்சேரி, கடலூா் துறைமுகங்களில்1-ஆம் எண் புயல் கூண்டு ஏற்றம்

அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதையடுத்து புதுச்சேரி பழைய துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு சனிக்கிழமை காலை ஏற்றப்பட்டது. இதேபோன்று கடலூா் துறைமுகத்திலும் 1-ஆம் எ... மேலும் பார்க்க