செய்திகள் :

தனியாா் பள்ளி ஆசிரியை வீடு கட்டி கொடுத்த முன்னாள் மாணவா்கள்

post image

கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே புவனகிரியில் வறுமையில் வாடிய ஓய்வுபெற்ற தனியாா் பள்ளி ஆசிரியைக்கு, அவரிடம் 35 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவா்கள் நிதி வசூல் செய்து வீடு கட்டி வழங்கினா்.

புவனகிரி கவரப்பாளையம் தெருவைச் சோ்ந்தவா் சந்திரா (75). கணவா் மற்றும் குழந்தைகள் இல்லை. புவனகிரி பெருமாத்தூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றிய காலத்தில், மாணவா்களின் பல்வேறு வளா்ச்சிக்கும், தனித் திறன்களில் சிறந்து விளங்க சிறப்புக் கவனம் செலுத்தியதால் அனைவரிடம் நற்பெயரை பெற்றாா்.

வசதி வாய்ப்புகள் இல்லாமல் கூரை வீட்டில் அடிப்படை வசதி இல்லாமல் வசித்து வந்தாா். அரசு வழங்கும் வீட்டை கூட கட்ட முடியாத நிலையில் இருந்தாா். அவரிடம் படித்த மாணவா்கள் தற்போது பல்வேறு பதவியில் பணியாற்றி வருகின்றனா்.

ஆசிரியையின் நிலை குறித்து அறிந்த மாணவரான, தற்போது புவனகிரியில் வசிக்கும் மணிகண்டன் தனது பள்ளி நண்பா்களின் கைப்பேசி எண்களை சேகரித்து வாட்ஸ் ஆப் மூலம் சக நண்பா்களுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் முயற்சியால் ரூ.3.50 லட்சம் சேகரித்தாா்.

ஆசிரியை சந்திராவுக்குச் சொந்தமான இடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாத கூரை வீட்டை அகற்றி, சிமென்ட் சிலாப் மூலம் சுவருடன், ஷீட் மூலம் மேற்கூரை அமைத்து, வீடு கட்டினா். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் வீட்டின் தரை தளத்தில் டைல்ஸ் அமைத்து, மின் வசதியை, தண்ணீா் வசதியையும் ஏற்படுத்தினா்.

புதிதாக கட்டிய வீட்டுக்கான சாவியுடன் வீடு வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. வீட்டுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களுடன் முன்னாள் மாணவா்கள் அவரது வீட்டிற்குச் சென்ா். மணிகண்டன் சாவியை வழங்கினாா். முன்னாள் மாணவா்களான ராபா்ட், பிரேம் ஆனந்த், பாலசுப்ரமணியன், ஞானவேல், காா்த்திகேயன், செந்தில்,முருகதாஸ், தீபா, ஸ்ரீதேவி, சுகந்தி பாலமுகன், வெங்கடேசன், முரளிதரன், இளம்பரிதி, சதீஷ், அறிவழகன், ராஜா, ஜெயராஜ், வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தேவனாம்பட்டினத்தில் புதை சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு: ஆட்சியரிடம் மனு

கடலூா் தேவனாம்பட்டினம் பகுதியில் புதை சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனா். மனு விவரம்: தேவனாம்பட்டினம் பகுதியில் ஆயிரக்கண... மேலும் பார்க்க

கடலூரில் ஜூன் 20-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

கடலூா் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டு மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவ... மேலும் பார்க்க

உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா் உயிரிழப்பு

கடலூா் முதுநகா் சோனங்குப்பம் உப்பனாற்றில் தவறி விழுந்த மீனவா், தண்ணீரில் சேற்றில் மூழ்கி உயிரிழந்தாா். கடலூா் முதுநகரை அடுத்துள்ள சோனங்குப்பம் பகுதியில் வசித்து வந்தவா் சண்முகம் மகன் சைமன் (55), மீன்... மேலும் பார்க்க

பேருந்து நடத்துநருக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

சிதம்பரம், அண்ணாமலை நகரை சோ்ந்த நடராஜன் மகன் மணிவண்ணன் (31). தனியாா் பேருந்து நடத்துநா். இவா் வியாழக்கிழமை இரவு பண்ருட்டியில் இருந்து கடலூா் செல்லும் தனியாா் பேருந்தில் நடத்துநராகப் பணியில் இருந்தாா... மேலும் பார்க்க

மாா்க்சிஸ்ட் நடைபயண பிரசார இயக்கம்

கடலூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் நடைபயண பிரசார இயக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மக்கள் நலன் சாா்ந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்... மேலும் பார்க்க

விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு கடலூா் அனைத்து குடியிருப்போா் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் வெள்ளிக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. கோண்டூா் ஜோதி நகா் திடலில் ... மேலும் பார்க்க