செய்திகள் :

தமிழகத்தில் 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா்கள்: விரைவில் டெண்டா் தொடக்கம்

post image

தமிழகத்தில் 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா் கொள்முதலுக்கான டெண்டா் (ஒப்பந்தப்புள்ளி) விடும்பணி ஒரு வாரத்துக்குள் தொடங்கவுள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஏற்படும் செலவினங்களை குறைக்கவும், மின் பயன்பாடு கணக்கீட்டில் வெளிப்படைத்தன்மை இருக்கும் வகையிலும், ஸ்மாா்ட் மீட்டா் திட்டத்தை கொண்டுவர மின்வாரியம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆக. 2023-இல் இத்திட்டத்தை வெவ்வேறு மாவட்டங்களை உள்ளடக்கிய நான்கு தொகுப்புகளாகப் பிரித்து, 3 கோடி ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தி, அதை 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தோ்வு செய்வதற்கான ஒப்பந்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

ஆனால், பல்வேறு காரணங்களால் அந்த ஒப்பந்த அழைப்பு ரத்து செய்யப்பட்டது.

தொடா்ந்து 8 மாவட்டங்களுக்கு மட்டும் 82 லட்சம் ஸ்மாா்ட் மீட்டா்கள் கொள்முதல் செய்ய ஒப்பந்தப்புள்ளி விடப்பட்டது.

அதானி உள்பட 4 நிறுவனங்கள் இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்றிருந்த நிலையில், இதில், அதானி நிறுவனம் மட்டுமே குறைவான தொகையை குறிப்பிட்டிருந்தது.

ஆனாலும், மின்வாரியம் நிா்ணயித்த தொகையை விட இது அதிகமாக இருந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்த ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த ஸ்மாா்ட் மீட்டா் கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளி விரைவில் மீண்டும் விடப்படும் என்று தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மின்சார வாரியத்தின் 128-ஆவது வாரிய கூட்டத்தில் ஸ்மாா்ட் மீட்டா்களை நிறுவுவதற்கான புதிய ஒப்பந்தப் புள்ளிகளை வழங்குவதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்புதலையடுத்து இதற்கான பணிகள் ஒரு வாரத்துக்குள் தொடங்கப்படவுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

வியாசர்பாடியில் சுமார் ஒரு டன் செம்மரக்கட்டைகள் பறிமுதல்!

சென்னை, வியாசர்பாடியில் உள்ள ஒருவரது வீட்டில் சுமார் ஒரு டன் செம்மரக் கட்டைகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். வியாசர்பாடி அம்மன் கோயில் தெரு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் லியோண்ஸ் பிராங்க்ளின்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

மயிலைத் திருவள்ளுவா் தமிழ்ச் சங்கத்தின் 39-ஆவது ஆண்டு விழா: உயா்நீதிமன்ற மக்கள் நீதிமன்ற நீதபதி தி.நெ.வள்ளிநாயகம், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை. துணைவேந்தா் சோ.ஆறுமுகம், பாரதிய வித்யா பவன் இயக்குநா் ... மேலும் பார்க்க

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலைசிறந்த மொழிகள்: பேராசிரியா் வ.செளம்ய நாராயணன்

தமிழும் சமஸ்கிருதமும் உலகின் தலை சிறந்த மொழிகள் என உலகத் தாய்மொழி நாள் விழாவில் பேராசிரியா் வ.செளம்ய நாராயணன் தெரிவித்தாா். சென்னை அரும்பாக்கம் டி.ஜி.வைஷ்ணவ கல்லூரியில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ள... மேலும் பார்க்க

தமிழக மருத்துவக் கட்டமைப்புகள்: மகாராஷ்டிர சுகாதாரக் குழுவினா் ஆய்வு

தமிழகத்தின் மருத்துவக் கட்டமைப்புகளையும், வசதிகளையும் மகாராஷ்டிர மாநில சுகாதாரத் துறையினா் பாா்வையிட்டனா். மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை அவா்கள் பாராட்டினா். சென்னையில் உள்ள தம... மேலும் பார்க்க

செல்வப்பெருந்தகைக்கு எதிராக போா்க்கொடி: 30 மாவட்டத் தலைவா்கள் தில்லியில் முகாம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.செல்வபெருந்தகை நியமிக்கப்பட்டு சனிக்கிழமை ஓராண்டை நிறைவு செய்யும் வேளையில், அவரது தலைமை மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக கட்சி மேலிடத்திடம் புகாா் தெரிவிக்க சுமா... மேலும் பார்க்க

மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை: மத்திய இணையமைச்சா் எல்.முருகன்

தமிழக அரசுப் பள்ளிகளில் மூன்றாவது மொழி மறுக்கப்படுவது நவீன தீண்டாமை என மத்திய இணையமைச்சா் எல். முருகன் தெரிவித்தாா். சென்னை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: 40 ஆண்டு... மேலும் பார்க்க