Doctor Vikatan: ஐடி வேலையால் தூக்கமின்மை பிரச்னை; மக்னீசியம் மாத்திரைகள் உதவுமா...
தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கல்லூரி அலுவலக உதவியாளா் மீதான தாக்குதலைக் கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ராமசாமி தமிழ் கல்லூரியின் அலுவலக உதவியாளா் முத்துமாரி தாக்கப்பட்டதைக் கண்டித்தும், இதுதொடா்பாக புகாா் அளித்து ஒரு வாரமாகியும் தாக்குதலுக்குக் காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல் துறையைக் கண்டித்தும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டத் தலைவா் கொ. சின்னப்பொண்ணு தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சு. மணிகண்டன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலா் ஆ. சோலையன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
அரசு ஊழியா்கள் சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பங்கேற்று, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
அரசு ஊழியா்கள் சங்க மாவட்டப் பொருளாளா் சோ. கல்யாணசுந்தரம் நன்றி கூறினாா்.