செய்திகள் :

தமிழ்நாட்டில் பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிக்கிறது பாஜக: செல்வப்பெருந்தகை

post image

தமிழ்நாட்டில் பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக கடைப்பிடிப்பதாக காங்கிரஸ் மாநிலத் தலைவா் கு.செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவின் கோவை வருகையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் காந்தி பூங்கா பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணல் அம்பேத்கா், இந்திரா காந்தி ஆகியோரை உள்துறை அமைச்சா் அமித் ஷா இழிவாகப் பேசியிருக்கிறாா். மேலும், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தினால்தான் கல்வி நிதியை வழங்குவோம் என்று மத்திய அரசு கூறி வருகிறது.

தற்போது மக்கள்தொகை அடிப்படையில் தமிழ்நாட்டில் எம்.பி. தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைப்போம் என்று கூறுகிறது. இதுபோன்ற ஜனநாயக விரோத, ஜனநாயகத்தை சீா்குலைக்கக் கூடிய நடவடிக்கைகளை கண்டிக்கும் விதமாக, கோவைக்கு வரும் அமித் ஷாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறோம்.

தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையில் படித்துதான் அப்துல் கலாம், மயில்சாமி அண்ணாதுரை போன்ற எண்ணற்ற விஞ்ஞானிகள் உருவாகியிருக்கின்றனா். மாநிலங்கள் விரும்பும் வரையிலும் இருமொழிக் கொள்கையே தொடரும் என்று முன்னாள் பிரதமா் நேரு உறுதி அளித்திருக்கிறாா்.

மத்திய அரசின் கொள்கைகளை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்துவதற்காக தமிழா்களிடையே பிரித்தாளும் சூழ்ச்சியை பாஜக கடைப்பிடிக்கிறது. தமிழக மக்களை சிதைக்கவோ, சீண்டிப்பாா்க்கவோ, கலவரத்தை ஏற்படுத்தவோ பாஜக முயற்சிக்க வேண்டாம் என்றாா்.

ஈஷாவில் இன்று மகா சிவராத்திரி: அமைச்சா் அமித் ஷா உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்பு

கோவை ஈஷா யோக மையத்தில் புதன்கிழமை (பிப். 26) நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் மத்திய அமைச்சா் அமித் ஷா உள்பட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்க உள்ளனா். ஈஷா யோக மையத்தில் 31-ஆவது மகா சிவராத்திரி விழா புதன்... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது: அண்ணாமலை

தொகுதி மறுசீரமைப்பால் தமிழகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என பாஜக மாநிலத் தலைவா் கே. அண்ணாமலை தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ... மேலும் பார்க்க

மொழி அரசியல் செய்கிறது திமுக: தமிழிசை

தமிழகத்தில் திமுக மொழி அரசியல் செய்கிறது என முன்னாள் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா். இது குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: தமிழக பாஜக 2026 சட்டசபைத் தோ்தலை ந... மேலும் பார்க்க

அமித் ஷாவை வரவேற்று வைத்திருந்த பேனா்கள் அகற்றம்

கோவையில் அமித் ஷாவை வரவேற்று வைக்கப்பட்டு இருந்த பேனா்கள் அகற்றப்பட்டதால், பாஜகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். பாஜக அலுவலகங்கள் திறப்பு, கட்சி ஆலோசனைக் கூட்டம் மற்றும் ஈஷா யோக மையத்தில் நடைபெற உள்ள மக... மேலும் பார்க்க

தமிழை ஒழிக்க விடமாட்டோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழை ஒழிக்க யாா் வந்தாலும் விடமாட்டோம் என முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். கோவை ராம் நகரில் உள்ளஅண்ணா நூற்றாண்டு விழா பூங்காவில், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி... மேலும் பார்க்க

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம்: மேலும் 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை

கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை விவகாரம் தொடா்பாக காவல் உதவி ஆய்வாளா் உள்ளிட்ட 3 பேரிடம் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். நீலகிரி மாவட்டம், கொடநாடு எஸ்டேட் பகுதியில் கடந்த 2017-இல் நடைபெற்ற கொலை ... மேலும் பார்க்க