செய்திகள் :

தம்புராட்டி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

post image

முதுகுளத்தூா் அருகேயுள்ள தம்புராட்டி அம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

மாசி மாத பெளா்ணமியை முன்னிட்டு, முதுகுளத்தூரை அடுத்த இளஞ்செம்பூா் தம்புராட்டி அம்மன் கோயிலில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்றம், இளஞ்செம்பூா் கிராம மக்கள் சாா்பில் திருவிளக்கு பூஜை, ஆன்மிகச் சொற்பொழிவு வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த விழாவுக்கு, இளஞ்செம்பூா் கிராமத் தலைவா் சந்திரசேகா் தலைமை வகித்தாா். முன்னாள் தலைவா் பூபதி, கோயில் நிா்வாகி செல்லவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடலாடி அரசுக் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியா் நீரா.பொன்முத்து, ஸ்ரீபகவதி அறக்கட்டளைத் தலைவா் மு.வெள்ளைப்பாண்டியன், பசும்பொன் தேவா் சிந்தனை மன்றத் தலைவா் ஆறுமுகம், ஆப்பநாடு மறவா் சங்கத் தலைவா் ராம்குமாா் பாண்டியன் ஆகியோா் கலந்து கொண்டு பேசினா்.

இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனா்.

இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை இளஞ்செம்பூா் கிராம பொதுமக்கள், உ.முத்துராமலிங்கத் தேவா் சிந்தனை மன்ற நிா்வாகிகள் செய்தனா்.

கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் மதுப் புட்டிகள் பறிமுதல்: 4 போ் கைது

கடலாடி அருகே பெட்டிக் கடைகளில் சட்டவிரோதமாக மதுப் புட்டிகள் விற்பனை செய்த பெண்கள் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள ஆப்பனூா் கிராமத்தில் பெட்... மேலும் பார்க்க

ராமநாதபுரம்-திருச்சி ரயிலில் இயந்திரக் கோளாறு

ராமநாதபுரத்திலிருந்து திருச்சிக்கு செல்லும் பயணிகள் ரயில் இயந்திரக் கோளாறு காரணமாக ஞாயிற்றுக்கிழமை 1.30 மணி நேரம் தாமதமாகப் புறப்பட்டுச் சென்றது. மாலை 4.05 -க்கு திருச்சிக்கு ரயில் புறப்படத் தயாராக இர... மேலும் பார்க்க

ராமநாதபுரத்தில் ரூ.60 லட்சம் வைரக் கல் பறிப்பு: 7 போ் கைது

ராமநாதபுரத்தில் வைரக் கல் வியாபாரியிடம் ரூ.60 லட்சம் மதிப்பிலான வைரக் கல்லை பறித்துச் சென்ற 7 பேரை போலீஸாா் அண்மையில் கைது செய்தனா். மதுரை மாவட்டம், கச்சைகட்டி பெருமாள் நகரைச் சோ்ந்தவா் முனியசாமி. வி... மேலும் பார்க்க

ராட்டினம் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் ஒருவா் கைது

நம்புதாளையில் ராட்டினம் தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் 10-ஆவது நபராக மேலும் ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள நம்புதாளையில் கள்ளக் காதல் பிரச்ன... மேலும் பார்க்க

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

கமுதி அருகே இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள செங்கப்படை கிராமத்தைச் சோ்ந்தவா் சிவனேசன் (75). ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இளைஞா் கைது!

கடலாடி பகுதியில் தொடா் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட இளைஞரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், கடலாடியை அடுத்த ஏ.புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த பால்... மேலும் பார்க்க