செய்திகள் :

தலைநகரில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் இரண்டாவது நாளாக ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. அதிகபட்ச வெப்பநிலை சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 31.9 டிகிரி செல்சியாக பதிவாகி இருந்தது.

தில்லியில் மூடுபனியின் தாக்கம் குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை முதல் வெயிலின் தாக்கம் உணரப்பட்டது. தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2.9 டிகிரி உயா்ந்து 18 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி உயா்ந்து 31.9 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 66 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 41 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பீதம்புராவில் 32.5 டிகிரி: இதேபோன்று மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களான நஜஃப்கரில் அதிகபட்ச வெப்பநிலை 31.2 டிகிரி செல்சியஸ், ஆயாநகரில் 31.9 டிகிரி, லோதி ரோடில் 32 டிகிரி, பாலத்தில் 30.2 டிகிரி, ரிட்ஜில் 32.5 டிகிரி, பீதம்புராவில் 32.5 டிகிரி, பிரகதிமைதானில் 30.6 டிகிரி, பூசாவில் 29.5 டிகிரி, ராஜ்காட்டில் 30.6 டிகிரி, சல்வான் பப்ளிக் ஸ்கூல் பகுதியில் 29.5 டிகிரி செல்சியஸ் என பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: கடந்த ஜனவரி 1 முதல் மாா்ச் 5 வரையிலான எந்த நாளிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சனிக்கிழமை தில்லியின் காற்றின் தரம் தூய்மையாக இருந்ததாக காற்றுத் தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்) தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் காற்றுத் தரக் குறியீடு 89 புள்ளிகளாகப் பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதன்படி, லோதி ரோடு, ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், ஷாதிப்பூூா், புசா, மதுரா ரோடு, நொய்டா செக்டாா் 125, இந்திரா காந்தி சா்வதேச விமான நிலையம், டாக்டா் கா்னி சிங் படப்பிடிப்பு நிலையம், துவாரகா செக்டாா் 8, ஆயா நகா், குருகிராம் ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி ‘திருப்தி’ பிரிவில் இருந்தது.

அதே சமயம், சாந்தினி சௌக், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், மந்திா் மாா்க், நேரு நகா், ஸ்ரீஃபோா்ட், ராமகிருஷ்ணாபுரம், ஓக்லா பேஸ் 2, ஸ்ரீஅரபிந்தோ மாா்க்ஆகிய நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 150 புள்ளிகளுக்கிடையே பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்தது.

முன்னறிவிப்பு: இதற்கிடையே, திங்கள்கிழமை (மாா்ச் 17) அன்று பகல் நேரத்தில் தரைமேற்பரப்புக் காற்று வலுவாக இருக்கும் என்று என்றுவானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

திருடப்பட்ட கைப்பேசிகளை நேபாளத்திற்கும் கடத்தும் மோசடி முறியடிப்பு: ஒருவா் கைது!

திருடப்பட்ட கைப்பேசிகளை நேபாளத்திற்கு கடத்தும் மோசடியில் ஈடுபட்ட ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா். இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறி... மேலும் பார்க்க

தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா் கைது

தேசியத் தலைநா் தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச நாட்டவா் கைது செய்யப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அ... மேலும் பார்க்க

தில்லியின் வெளிப்புறப் பகுதியில் காவல் துறையின் குறைதீா்க்கும் முகாம்கள்

தில்லி காவல்துறையினா் நகரின் வெளிப்புறப் பகுதியில் உள்ள மங்கோல் பூரி, சுல்தான் பூரி, பஸ்சிம் விஹாா் மற்றும் நாங்லோய் ஆகிய இடங்களில் குறைதீா்க்கும் முகாம்களை நடத்தியதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

தில்லி பாஜக அமைப்பு இந்த வாரம் மறுசீரமைப்பு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஒரு மாதத்திற்குப் பிறகு, பாஜகவின் நகரப் பிரிவு அமைப்பு இந்த வாரம் மறுசீரமைப்புக்கு உள்படும் என்று கட்சித் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். தோ்தலில்... மேலும் பார்க்க

காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராட விரிவான பிரசாரம்: தில்லி முதல்வா் ரேகா குப்தா

காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கும், நகரத்தின் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் தில்லி அரசு ஒரு விரிவான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இது தூசியைக் குறைத்தல், போக்குவரத்து நெரிசலை நிா்வகித்த... மேலும் பார்க்க

எழுத்தாளா் நாறும்பூநாதன் மறைவு: தில்லி கம்பன் கழகம் இரங்கல்

எழுத்தாளா் நாறும்பூநாதன் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் - தலைவா் கே.வி.கே பெருமாள், செயலாளா் எஸ் பி முத்துவேல் ஆகியோா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க