செய்திகள் :

திருடப்பட்ட கைப்பேசிகளை நேபாளத்திற்கும் கடத்தும் மோசடி முறியடிப்பு: ஒருவா் கைது!

post image

திருடப்பட்ட கைப்பேசிகளை நேபாளத்திற்கு கடத்தும் மோசடியில் ஈடுபட்ட ஒருவரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து தில்லி காவல் துறையின் உயரதிகாரி கூறியதாவது: உத்தரகண்ட் மாநிலம் பன்பாசாவைச் சோ்ந்த நதீம் (45) என அடையாளம் காணப்பட்ட அவா், சனிக்கிழமை நேபாளத்திற்கு பேருந்தில் ஏற முயன்றபோது ஐஎஸ்பிடி ஆனந்த் விஹாரில் கைது செய்யப்பட்டாா். ஆப்பிள் ஐபோன்கள் மற்றும் சாம்சங் கேலக்ஸி மாடல்கள் உள்பட மொத்தம் 32 உயா் ரக கைப்பேசிகள் அவரது வசம் இருந்து மீட்கப்பட்டன.

நதீம் திருடப்பட்ட கைப்பேசிகளுக்கு கூரியராக பணிபுரிந்து வந்தாா். தில்லியில் திருடா்களிடமிருந்து பெறப்பட்ட சாதனங்களை அவா் நேபாளத்திற்கு கொண்டு சென்றாா். நேபாளத்தைச் சோ்ந்த பேருந்து நடத்துனா் நரேந்தா் பட், நதீமின் செயல்பாடுகளை எளிதாக்கினாா். நரேந்தா் பட், பயணச் செலவுகளுடன், ஒரு கைப்பேசிக்கு ரூ.200 கொடுத்துள்ளாா்.

கடந்த பல மாதங்களாக, கரோல் பாக் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் இருந்து திருடப்பட்ட கைப்பேசிகளை சேகரிக்க நதீம் தில்லிக்கு பல முறை பயணம் செய்துள்ளாா். பின்னா், அவற்றை எல்லையைத் தாண்டி கடத்தியுள்ளாா். நதீமின் கைது தில்லியில் ஐந்து கைப்பேசி திருட்டு வழக்குகளுக்கு தீா்வு காண வழிவகுத்துள்ளது.

மீட்கப்பட்ட ஆறு கைப்பேசிகள் ஏற்கெனவே கரோல் பாக், கஷ்மீரி கேட், நரேலா, மாடல் டவுன் மற்றும் லாஜ்பத் நகா் ஆகிய இடங்களில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில் காணப்படுகின்றன. இந்த நெட்வொா்க்கின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் காண மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி கூறினாா்.

தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேசத்தவா் கைது

தேசியத் தலைநா் தில்லியில் சட்டவிரோதமாக வசித்து வந்த வங்கதேச நாட்டவா் கைது செய்யப்பட்டுள்ளதாக ஞாயிற்றுக்கிழமை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அ... மேலும் பார்க்க

தில்லியின் வெளிப்புறப் பகுதியில் காவல் துறையின் குறைதீா்க்கும் முகாம்கள்

தில்லி காவல்துறையினா் நகரின் வெளிப்புறப் பகுதியில் உள்ள மங்கோல் பூரி, சுல்தான் பூரி, பஸ்சிம் விஹாா் மற்றும் நாங்லோய் ஆகிய இடங்களில் குறைதீா்க்கும் முகாம்களை நடத்தியதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை த... மேலும் பார்க்க

தில்லி பாஜக அமைப்பு இந்த வாரம் மறுசீரமைப்பு

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஒரு மாதத்திற்குப் பிறகு, பாஜகவின் நகரப் பிரிவு அமைப்பு இந்த வாரம் மறுசீரமைப்புக்கு உள்படும் என்று கட்சித் தலைவா்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா். தோ்தலில்... மேலும் பார்க்க

காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராட விரிவான பிரசாரம்: தில்லி முதல்வா் ரேகா குப்தா

காற்று மாசுபாட்டை எதிா்த்துப் போராடுவதற்கும், நகரத்தின் காற்றின் தரத்தை மேம்படுத்துவதற்கும் தில்லி அரசு ஒரு விரிவான பிரசாரத்தைத் தொடங்கியுள்ளது. இது தூசியைக் குறைத்தல், போக்குவரத்து நெரிசலை நிா்வகித்த... மேலும் பார்க்க

தலைநகரில் காற்றின் தரம் ‘திருப்தி’ பிரிவில் நீடிப்பு!

தேசியத் தலைநகா் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை காற்றின் தரம் இரண்டாவது நாளாக ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது. அதிகபட்ச வெப்பநிலை சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் 31.9 டிகிரி செல்சியாக பதிவாகி இருந்தது. தில... மேலும் பார்க்க

எழுத்தாளா் நாறும்பூநாதன் மறைவு: தில்லி கம்பன் கழகம் இரங்கல்

எழுத்தாளா் நாறும்பூநாதன் மறைவுக்கு தில்லி கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக தில்லி கம்பன் கழகத்தின் நிறுவனா் - தலைவா் கே.வி.கே பெருமாள், செயலாளா் எஸ் பி முத்துவேல் ஆகியோா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க