செய்திகள் :

தவெக பெயரில் விஷமக் கருத்தை திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது: புஸ்ஸி ஆனந்த்

post image

தவெக பெயரில் விஷமக் கருத்தை திணிக்கும் முயற்சி கண்டிக்கத்தக்கது என கட்சியின் பொதுச்செயல் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், தொலைக்காட்சி, செய்தி ஊடகங்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகளில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் தலைவர் அவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட கொள்கை பரப்பு மற்றும் செய்தித் தொடர்பு நிர்வாகிகள் தெரிவிக்கும் கருத்துகள் மட்டுமே கழகத்தின் கருத்து மற்றும் நிலைப்பாடாகும்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரைக் கட்சித் தலைவர் அறிவித்து, கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, மாணவர்களுக்குப் பாராட்டுச் சான்று மற்றும் ஊக்கத் தொகை வழங்கியது, வெற்றிக் கொள்கைத் திருவிழா, கட்சி ஆண்டு விழா எனத் தமிழக வெற்றிக் கழகம் வீறுநடை போட்டு, மக்களின் பேராதரவுடன் மிகப் பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாத சில அரசியல் கட்சிகள், தங்கள் ஆதரவாளர்களை, பத்திரிகையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் என்ற போர்வையில், தமிழக வெற்றிக் கழகத்தின் ஆதரவாளர்களாகச் சித்திரித்து ஊடக விவாதங்களில் பங்கேற்கச் செய்து, திட்டமிட்ட சில விஷமக் கருத்துகளைத் திணிக்கும் பணியைச் செய்து வருகின்றன. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆளுநரிடம் கோரிக்கை மனு அளித்த மீனவர்கள்!

ஊடக விவாதங்களில் பங்கேற்பதற்காக, தமிழக வெற்றிக் கழகத் தலைவரால் அல்லது அவரின் ஒப்புதலோடு தலைமை நிலையச் செயலகத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாதவர்கள், ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்துகள், தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வக் கருத்தோ அல்லது நிலைப்பாடோ அல்ல என்பதைக் கட்சித் தலைவரின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

எனவே அதிகாரப்பூர்வமற்றவர்கள் கட்சியின் பெயரைப் பயன்படுத்தி, ஊடக விவாதங்களில் கலந்துகொண்டு தெரிவிக்கும் கருத்து மற்றும் நிலைப்பாடுகளைத் தமிழக மக்களும் கழகத் தோழர்களும் நம்பவோ, ஏற்றுக்கொள்ளவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீவைகுண்டத்தில் 110 மி.மீ. மழை பதிவு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை 110 மி.மீ. மழை பதிவானது. தென் மாவட்டங்களில் திங்கள்கிழமை (மாா்ச் 3) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள... மேலும் பார்க்க

தொகுதி மறுசீரமைப்பு: மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் கனிமொழி வலியுறுத்தல்

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு எந்த அடிப்படையில் நடைபெறும் என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் கனிமொழி வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா் எக்ஸ்... மேலும் பார்க்க

‘தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும்’

மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தமிழகத்தின் நிலைப்பாட்டை காங்கிரஸ் ஆதரிக்கும் என்று அக் கட்சியின் அகில இந்திய மேலிடப் பொறுப்பாளா் கிரீஷ் சோடங்கா் தெரிவித்தாா். புதிதாக நியமிக்கப்பட்ட தமிழக ... மேலும் பார்க்க

நீட் தோ்வு விண்ணப்பப் பதிவு: தோ்வா்களுக்கு என்டிஏ அறிவுறுத்தல்

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்கு ஒருவா் ஒருமுறை மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என தேசிய தோ்வு முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளி... மேலும் பார்க்க

மாம்பலம் ரயில் நிலையம் மறுசீரமைப்புப் பணி விரைவில் நிறைவடையும்: தெற்கு ரயில்வே தகவல்

மாம்பலம் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி நடப்பு மாதத்துக்குள் நிறைவடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ‘அம்ருத் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் மு... மேலும் பார்க்க

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

மத்திய பல்கலைக்கழக இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தோ்வுக்கு விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுந... மேலும் பார்க்க