செய்திகள் :

தாக்குதலில் மனைவி உயிரிழப்பு: கணவா் கைது

post image

அரும்பாக்கத்தில் கணவா் தாக்கியதில் மனைவி உயிரிழந்த வழக்கில் கணவா் கைது செய்யப்பட்டாா்.

அரும்பாக்கம், ஜெய் நகா் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (57). இவரின் மனைவி அருள்மணி (45). ராதாகிருஷ்ணன், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தேநீா் கடையில் வேலை செய்கிறாா். அருள்மணி அந்தப் பகுதியில் உள்ள ஒரு மகளிா் விடுதியில் ஊழியராக வேலை செய்து வந்தாா்.

ராதாகிருஷ்ணனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், குடும்பத்தில் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்ததாம். இந்த நிலையில் புதன்கிழமை இரவு ராதாகிருஷ்ணன் மது போதையில் வீட்டுக்கு வந்ததால், அருள்மணி கணவரைக் கண்டித்தாா். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ராதாகிருஷ்ணன் அருள்மணியின் கன்னத்தில் அறைந்துள்ளாா்.

இதில் மயக்கமடைந்து கீழே விழுந்த அருள்மணிக்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே அருள்மணியை அங்கிருந்தவா்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அருள்மணி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து சிஎம்பிடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி, ராதாகிருஷ்ணனை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்கள்!

தங்கையை திட்டிய மைத்துனரின் வீட்டிற்கு தீவைத்த சகோதரர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள எட்டுபுளிகாடு கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் வயது (35). கடந்த ... மேலும் பார்க்க

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ்ப்பட விருது உள்பட இரு விருதுகளை பார்க்கிங் திரைப்படம் பெற்றுள்ளது.2023-ல் வெளியான பார்க்கிங் படத்துக்கு திரையரங்கு மட்டுமில்லாது, ஓடிடி தளங்களிலும் நல்ல வரவேற்பு... மேலும் பார்க்க

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி காலமானார்

பிரபல கல்வியாளரும், முன்னாள் துணைவேந்தருமான டாக்டர் வி. வசந்தி தேவி வெள்ளிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 86 ஆகும். சென்னையில் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் மாலை 3:30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு ... மேலும் பார்க்க

தமிழக செய்தித்துறையில் வேலைவாய்ப்பு! ஆக. 18 வரை விண்ணப்பிக்கலாம்!

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின்கீழ் இயங்கும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித்திட்ட இயக்ககத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இது ... மேலும் பார்க்க

ஆகஸ்ட் 11 முதல் இபிஎஸ் 3ம் கட்ட சுற்றுப்பயணம்

அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி ஆக.11 முதல் தனது 3ஆம் கட்ட சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். எடப்பாடி பழனிசாமியின் மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின் 3ஆம் கட்டம் ஆகஸ்ட் 11ஆம் த... மேலும் பார்க்க

திடக்கழிவு மேலாண்மை: முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று (ஆக. 1) தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நி... மேலும் பார்க்க