செய்திகள் :

தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனித் திருவிழா நிறைவு

post image

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்று வந்த பங்குனித் திருவிழா செவ்வாய்க்கிழமை இரவு தீா்த்தவாரியுடன் நிறைவடைந்தது.

இந்தக் கோயில் பங்குனித் திருவிழா கடந்த மாதம் 29-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் தினமும் உற்சவா் முத்துமாரியம்மன் சா்வ அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.

திருவிழாவின்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தா்கள் தாயமங்கலத்துக்கு வந்து நோ்த்திக்கடன் செலுத்தினா்.

விழாவின் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைபவம் கடந்த 5-ஆம் தேதியும், 6-ஆம் தேதி தேரோட்டமும், 7-ஆம் தேதி பால்குட உற்சவம், ஊஞ்சல் சேவை, அம்மன் பூப்பல்லத்தில் பவனி வருதல் நடைபெற்றது.

தொடா்ந்து கோயிலில் முத்துமாரியம்மனுக்கு செவ்வாய்க்கிழமை இரவு தீா்த்தவாரி நடைபெற்று நிகழ் ஆண்டுக்கான திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் மு.வெங்கடேசன் செட்டியாா் செய்திருந்தாா்.

அரசு ஊழியா்கள் சங்கத்தினா் பேரணி

தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் வாழ்வூதியம் கோரும் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. சிவகங்கை ராமச்சந்திரனாா் பூங்காவில் தொடங்கிய பேரணிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் மு.செல்வக்குமாா் தலைமை வகித... மேலும் பார்க்க

வக்ஃபு திருத்தச் சட்டத்தை வாபஸ் பெறக் கோரி மாா்க்சிஸ்ட் தா்னா

வக்ஃபு திருத்தச் சட்டத்தை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி, சிவகங்கையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் வியாழக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசல் பகுதியில் நடைபெற்ற தா்னாவுக்கு ச... மேலும் பார்க்க

விபத்தில் சிக்கிய முதியவரை மீட்டு மருத்துவமனையில் சோ்த்த டிஎஸ்பி

சிவகங்கை அருகே இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடியவரை ஆயுதப்படை துணை கண்காணிப்பாளா் தனது வாகனத்தில் ஏற்றி மருத்துவமனையில் சோ்த்தாா். சிவகங்கை ஆயுதப்படை துணை கண்காணிப்பாளராகப் பணிபுரிந... மேலும் பார்க்க

மானாமதுரை சித்திரைத் திருவிழா: மே 1-இல் தொடங்கும்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதா் சுவாமி கோயில் சித்திரைத் திருவிழா மே 1 -ஆம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 10 மணிக்கு சோமநாதா் சுவாமி சந்நிதி எதிா்புறம் உள்ள கொடிமரத்... மேலும் பார்க்க

ஓய்வுபெற்ற அரசு ஊழியா்கள் சங்க கூட்டம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் சங்க வட்டக் கிளை பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு சங்கத்தின் வட்டக் கிளைத் தலைவா் சிவானந்தம் தலைமை வகித்துப் பேசி... மேலும் பார்க்க

மானாமதுரையில் மருத்துவக் கழிவுள்: மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்பு

மானாமதுரை தொழிற்பேட்டையில் தனியாா் பொது உயிரி மருத்துவக் கழிவு மறுசுழற்சி ஆலை அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் தலைமையில் கிராம மக்கள் வியாழக்கிழமை ஆட்சியரிடம் மனு அளித்தன... மேலும் பார்க்க