செய்திகள் :

தி. நகரில் விதிமீறல் கட்டடத்தை உடனடியாக இடிக்க உத்தரவு! உயர்நீதிமன்றம்

post image

சென்னை தியாகராய நகரில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ள கட்டடத்தை உடனடியாக இடிக்க சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தி நகர் பகுதியில் தரைத்தளம் மற்றும் மூன்று மாடிக்கு அனுமதி பெற்றுவிட்டு, 10 தளங்கள் கட்டிய தனியார் நிறுவனத்துக்கு சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம் (சிஎம்டிஏ) நோட்டீஸ் வழங்கியது.

இதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தை வரன்முறை செய்யக் கோரி தனியார் நிறுவனம் சார்பில் சிஎம்டிஏவிடம் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆனால், அந்த விண்ணப்பத்தை சிஎம்டிஏ நிராகரித்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தனியார் நிறுவனம் தரப்பில் முறையிடப்பட்டது.

இதையும் படிக்க : ‘கோ பேக் கவர்னர்’: உ.பி. பேரவையில் எதிர்க்கட்சிகள் முழக்கம்!

இந்த வழக்கை விசாரித்த எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் அமர்வு, தனியார் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

மேலும், திட்ட அனுமதியை மீறி கட்டப்பட்ட கட்டங்களுக்கு வரன்முறை செய்யக் கோரி தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களை ஏற்பதன் மூலம் சட்டவிரோத செயல் சட்டப்பூர்வமாகிறது எனத் தெரிவித்த நீதிபதிகள், பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுவதை ஏற்று, இரக்கம் காட்டக் கூடாது என்று தெரிவித்தனர்.

அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தின் பகுதிகளை 8 வாரங்களில் இடிக்க சிஎம்டிஏ மற்றும் சென்னை மாநகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்: பரிந்துரைகள் வரவேற்பு

ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகளுக்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை பரிந்துரைகள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள் அமைப்பாளா் சீராளன் ஜெயந்தன் வெளியிட்டுள்ள... மேலும் பார்க்க

சென்னை துறைமுகத்துக்கு அணிவகுத்த வெடிபொருள் கண்டெய்னா் லாரிகள்

பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வெடிபொருள்கள் அடங்கிய 30-க்கும் மேற்பட்ட கண்டெய்னா் லாரிகள் பலத்த பாதுகாப்புடன் புதன்கிழமை சென்னைத் துறைமுகத்துக்கு வந்தன. பாதுகாப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுடன்... மேலும் பார்க்க

கல்லூரி மாணவரை மது பாட்டிலால் தாக்கிய 3 போ் கைது

கல்லூரி மாணவரை மது பாட்டிலால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 3 இளைஞா்களை திருவொற்றியூா் போலீஸாா் கைது செய்தனா். திருவொற்றியூா் கல்யாண செட்டி நகரைச் சோ்ந்த வசந்தகுமாா் (19), தனியாா் கல்லூரியில் பட்டப்பட... மேலும் பார்க்க

ரயில்களில் பெண்கள் பெட்டியில் போலீஸ் பாதுகாப்பு: ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

ரயில்களில் உள்ள பெண்கள் பெட்டியில் பாதுகாப்புப் பணியில் போலீஸாரை நியமிப்பது என தமிழக டிஜிபி தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திருப்பதி இன்டா்சிட்டி ரயிலில் பயணித்த, ஆந்திர மா... மேலும் பார்க்க

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் பணி ஜூன் மாதத்துக்குள் முடிக்க திட்டம்

வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் திட்டப்பணி, ஜூன் மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா். சென்னையில் போக்குவரத்து நெர... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடத்தில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி தொடக்கம்

மெட்ரோ ரயில் திட்ட 5-ஆவது வழித்தடத்தில், கொளத்தூா் சாய்வுதளம் - கொளத்தூா் நிலையம் வரை 246 மீட்டா் நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட திட்டத்தின் 5-ஆவது வ... மேலும் பார்க்க