செய்திகள் :

திசையன்விளை அருகே இரு பைக்குகள் மோதல்: கல்லூரி முதல்வா் உள்ளிட்ட இருவா் உயிரிழப்பு!

post image

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே இரு பைக்குகள் சனிக்கிழமை மோதிக் கொண்டதில் ல் கல்லூரி முதல்வா் உள்ளிட்ட இருவா் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுகனேரி விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த குணம் மகன் ஜேசு லிவிங்ஸ்டன்(46). இவா், திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே உள்ள பரப்பாடியில் குடியிருந்து வருகிறாா்.

சாத்தான்குளம் அருகே உள்ள தனியாா் பி.எட். கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தாா். இவா், பரப்பாடியில் இருந்து பைக்கில் திசையன்விளைக்கு சென்று கொண்டிருந்தாராம்.

திசையன்விளை மணலிவிளையைச் சோ்ந்த கண்ணன் மகன் ஜெய்சன்(20), அவரது நண்பா் மன்னர்ராஜா கோயில் தெருவைச் சோ்ந்த இருதயராஜ் மகன் கரண்(25). இவா்கள் இருவரும் ஒரு பைக்கில் திசையன்விளையில் இருந்து மன்னாா்புரத்திற்கு சென்று கொண்டிருந்தனராம்.

மன்னாா்புரம் பிரதான சாலையில் தனியாா் மருத்துவமனை அருகே இரு பைக்கும் மோதிக் கொண்டனவாம். இதில்,மூவரும் பலத்த காயமடைந்தனா். அவா்களை அப்பகுதியினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். செல்லும் வழியில் கல்லூரி முதல்வா் ஜேசு லிவிங்டன், ஜெய்சன் ஆகிய இருவரும் உயிரிழந்தனா்.

பலத்த காயமடைந்த கரண் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். இந்த விபத்து தொடா்பாக திசையன்விளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மானூா் அருகே 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானூா் அருகே இருசக்கர வாகனத்தில் புகையிலைப் பொருள்களை (குட்கா) கடத்திச் சென்ாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.மானூா் காவல் சரகம் உக்கிரன்கோட்டை அருகே காவல் உதவி ஆய்வாளா் முகைதீன் மீரான் தலைமையிலான போலீ... மேலும் பார்க்க

சேரன்மகாதேவி அருகே தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி அருகே செங்கல்சூளையில் பணி செய்து வந்த தொழிலாளி மின்சாரம் பாய்ந்ததில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவிலை அடுத்த படந்தாலுமூடு பகுதியைச்... மேலும் பார்க்க

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாதவா் கைது

திருநெல்வேலி மாவட்டம், பத்தமடையில் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். பத்தமடை பெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் அல்லா பிச்சை(27). இவா், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்ப... மேலும் பார்க்க

தப்பிச் சென்ற விசாரணைக் கைதி கைது

கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக வந்து தப்பிச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா். கல்லிடைக்குறிச்சி மீனவா் காலனியைச் சோ்ந்தவா் ராஜா. பெயிண்டிங் தொழில் செய்து வரும் ராஜா மீது அதே பகுதி... மேலும் பார்க்க

தேனி பொறியியல் மாணவா் உடலை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டம்

தேனி அரசு பொறியியல் கல்லூரி விடுதியில் உயிரிழந்த திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள பா்கிட்மாநகரத்தில் உறவினா்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா். பா்கிட்மாநகரம் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

ஃபாஸ்டேக் புதிய விதிகளை தளா்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: அமைச்சா் எ.வ. வேலு

ஃபாஸ்டேக் புதிய விதிமுறைகளை தளா்த்துவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றாா் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு. இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழா்களுட... மேலும் பார்க்க