செய்திகள் :

ஃபாஸ்டேக் புதிய விதிகளை தளா்த்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்: அமைச்சா் எ.வ. வேலு

post image

ஃபாஸ்டேக் புதிய விதிமுறைகளை தளா்த்துவதற்கு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றாா் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சா் எ.வ. வேலு.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழா்களுடைய அடையாளம் உலகத்துக்கே தெரிய வேண்டும் என்ற அடிப்படையில் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறாா் முதல்வா் மு.க.ஸ்டாலின். அந்த வகையில் கீழடியில் தமிழருடைய வரலாற்று அடையாளங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதன் தொடா் முயற்சியாக வீரம் செறிந்த திருநெல்வேலி மண்ணில் பொருநை அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வா் அறிவித்தாா். இதையடுத்து, பொதுப்பணித் துறை சாா்பில் ரூ.56.36 கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு, ரெட்டியாா்பட்டியில் 13 ஏக்கா் நிலப்பரப்பில் 54 ஆயிரம் சதுர அடியில் அருங்காட்சியக கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட தமிழரின் அடையாளப் பொருள்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்படவுள்ளன.

75 சதவீத பணிகள் முடிவடைந்த நிலையில், கலை வடிவப் பணிகள், மின் விளக்குகள், வா்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 30-க்குள் இந்தப் பணிகளை முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஃபாஸ்டேக் விதிமுறைகள்

மாநில நிதியில் இருந்து நேரடியாக அமைக்கும் சாலைகளில் சுங்கச் சாவடி அமைக்கப்படுவதில்லை. சில சாலைகள் தேவைக்கேற்ப அவசரமாக போடப்படும்போது, உலக வங்கியில் இருந்து கடன் பெறப்படுகிறது. அந்தக் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக சுங்கச் சாவடிகளை அமைப்பதில் தவறு இல்லை. மத்திய அரசு, மாநில அரசிடம் உள்ள 7 மீட்டா் சாலையை பெற்றுக்கொண்டு, 10 மீட்டா் சாலையாக மாற்றி அதில் சுங்கச் சாவடிகளை அமைத்துவிடுகிறது.

இது தொடா்பாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரியிடம் பலமுறை கடிதம் அளித்துள்ளேன். காலாவதியான சுங்கச் சாவடிகளை அகற்றுமாறு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளோம்.

தேசிய நெடுஞ்சலையில் பெரும் வெள்ளத்தால் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க மத்திய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி வரவில்லை. இதன் காரணமாகவே நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அந்தப் பணிகளை விரைவில் செய்து முடிப்போம்.

ரூ. 600 கோடிக்கு திட்டம் தயாா் செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பிய நிலையில் தற்போது தான் சிறுக சிறுக நிதி வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஃபாஸ்டேக் புதிய விதிமுறைகள் மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக அமைந்திருக்கிறது. அந்த புதிய விதிமுறைப்படி வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்றால், இரு மடங்கு அபராதம் விதிக்கப்படும் என்பது தவறானது. தில்லி செல்கிறபோது, ஃபாஸ்டேக் புதிய விதிமுறைகளை தளா்த்துவதற்கு வலியுறுத்தப்படும் என்றாா்.

முன்னதாக, ரெட்டியாா்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் பொருநை அருங்காட்சியகப் பணிகளை அமைச்சா் எ.வ. வேலு பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். தொடா்ந்து,இப்பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.

பின்னா் பொதுப்பணித் துறை செயலா் ஜெயகாந்தன், முதன்மை தலைமைப் பொறியாளா் மணிவண்ணன், நெடுஞ்சாலைத் துறை செயலா் செல்வராஜ், திருநெல்வேலி மாவட்டத்தின் உயா் அதிகாரிகளுடன், மாவட்டத்தில் நடைபெற்று வரும் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை பணிகள் தொடா்பாக ஆலோசனை நடத்தினாா்.

அய்யா வைகுண்டா் அவதார தினம்: நெல்லைக்கு மாா்ச் 4இல் உள்ளூா் விடுமுறை

அய்யா வைகுண்டசாமியின் 193-ஆவது அவதார தினத்தையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு மாா்ச் 4-ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத் தோ்வுகள் மற்றும் மு... மேலும் பார்க்க

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நாடகம்: கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

மாஞ்சோலை விவகாரத்தில் தமிழக அரசு நாடகமாடுகிறது என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனா்- தலைவா் க.கிருஷ்ணசாமி குற்றஞ்சாட்டியுள்ளாா். திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: இடஒத... மேலும் பார்க்க

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவா்களுக்கு எம்.பி. இரங்கல்

கேரள மாநிலம் மூணாறுக்கு சுற்றுலா சென்றபோது விபத்தில் உயிரிழந்த மாணவா்களுக்கு திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் இரங்கல் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க

மின்கம்பி மீது லாரி உரசியதில் ரூ.1 லட்சம் வைக்கோல் தீக்கிரை!

கடையத்தில் மின்கம்பி மீது லாரி உரசியதில், அதிலிருந்த ரூ. ஒரு லட்சம் மதிப்பிலான வைக்கோல் தீக்கிரையானது. கடையம் பகுதியில் நெல் அறுவடை நடைபெற்றுவருதால், பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தோா் வைக்கோலை விலைக்கு வ... மேலும் பார்க்க

ஆழ்வாா்குறிச்சி கல்லூரிப் பேராசிரியருக்கு விருது!

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீபரமகல்யாணி கல்லூரிப் பேராசிரியருக்கு மாநில அளவிலான சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட அலுவலருக்கான விருது வழங்கப்பட்டது. 2015-16ஆம் ஆண்டுக்கான விருதுக்கு இக்கல்லூரியி... மேலும் பார்க்க

அம்பையில் எல்ஐசி ஊழியா்கள் வெளிநடப்புப் போராட்டம்!

அம்பாசமுத்திரத்தில் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவன ஊழியா்கள் வியாழக்கிழமை ஒரு மணி நேர வெளிநடப்புப் போராட்டம், கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். புதிய ஊழியா் நியமனம், சங்க அங்கீகாரம் ஆகிய கோரிக்கைகளை... மேலும் பார்க்க